பக்கம் எண் :

144

     
 தொறுவாய்ப் பட்ட தெரிய லூன்செத்துப்
பருந்துகொண் டுகப்பயாங் கண்டனம்
மறம்புகன் மைந்தன் மலைந்த மாறே.

   திணை: நொச்சி; துறை: செருவிடை வீழ்தல். வெறிபாடிய காமக்
காணியர் பாடியது.

     உரை: நீரறவு  அறியா  நிலமுதல்  கலந்த - நீர்  தொலைவறியாத
நிலமாகிய  முதலொடு  ஒன்றி  நிற்கும்;  கருங்குரல்  நொச்சி  கண்ணார்
குரூஉத்  தழை - கரிய கொத்துக்களையுடைய நொச்சியினது கண்ணுக்கு
நிறைந்த அழகிய நிறமுடைய தழை; மெல்லிழை மகளிர் ஐது அகல்
அல்குல் தொடலையாகவும் கண்டனம் - மெல்லிய இழைகளையணிந்த
இளமகளிருடைய அழகியதாக அகன்ற அல்குலிடத்தே தழையுடைாக
அணியப்படவும் கண்டேம் முன்பு;  இனி - இப்பொழுது;  வெருவரு
குருதியொடு மயங்கி - அச்சம் தருகின்ற  குருதியில்  கலந்து;  உருவு
கரந்து - உருமாறி; ஒறுவாய்ப்ட்ட தெரியல் - துணிபட்டுக்கிடந்த நொச்சி
மாலையை; ஊன் செத்து - ஊனென்று கருதி; பருந்து கொண்டு உகப்ப -
பருந்து கவர்ந்து உயரத்திற் கொண்டு போகவும்; யாம் கண்டனம் யாம்
கண்டேம்; மறம் புகல் மைந்தன் மலைந்த மாறு - மறத்தை விரும்பும்
இளையோன் அணிந் திருந்ததனால்; எ - று.


     நொச்சி முதலிய கருப்பொருட்கு நிலம் முதலாதலின், “நிலமுதல்”
என்றார். நிலமுதல் கலந்த நொச்சி யென்றதற்கு நிலத்தின்கண் நின்ற
அடிமரத்தில் தழைத்த நொச்சி யென்றுரைப்பினுமமையும். இளைய மகளிர்
அணியும் தழையில் நொச்சியும் ஒன்று; “ஐதக லல்குல் தழை யணிக்கூட்டும்
கூழை நொச்சி” (அகம். 275) என்று பிறரும் கூறுதல் காண்க.
ஒறுவாய்ப்பட்ட தெரியல் - ஒறுக்கும் வாள்வாய்ப்பட்டுத் துணிபட்டமாலை.
மறவன் செருவில் வாளால் வெட்டுண்டு வீழ்ந்தமை, அவன் அணிந்திருந்த
தெரியல் மேல் வைத்தோதியவாறு. நொச்சிக் குரூஉத் தழை, முன்பு,
தொடலை யாகவும் கண்டனம்; இனி, மைந்தன் மலைந்தமாறு, பருந்து
கொண்டு கப்பவும், யாம் கண்டனம் என மாறிக் கூட்டி வினைமுடிவு
செய்க.

      விளக்கம்: செருவிடை வீழ்தலாவது “ஆழ்ந்துபடு கிடங்கோடரு
மிளை காத்து,  வீழ்ந்த  வேலோர் விறல்மிகுத் தன்று” (பு.வெ.மா. 514)
என்பது. தொடலை, தொடுக்கப்படுவது; தழையும் மாலை போலத்
தொடுக்கப்படுவது பற்றித் தொடலை யெனப்பட்டது. நொச்சித்தழை
காண்டற்கு நிறைந்த அழகுடையதென்பார், “கண்ணார் குரூஉத்தழை”
யென்று சிறப்பித்தார்; ஆகவே, அதன் அழகு தழையிடைத்
தொடுக்கப்படும் தொழிற் பாட்டால் மேம்படுமாறு பெற்றாம்; “கண்ணார்
கண்ணி” (பொருந. 148) என்பது காண்க. மெல்லிழை மகளிர் என்றவிடத்து
மென்மையை மகளிர்க் கேற்றுக. மயங்குதல், கலத்தல். குருதி காண்பார்க்கு
அச்சமுண்டாதல்பற்றி “வெருவரு குருதி” யெனப்பட்டது. உருவு கரத்தல்,
குருதி படிந்து நிறம்