பக்கம் எண் :

160

     
10இவணுறை வாழ்க்கையோ வரிதே யானும்
 மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வாரத்
தொன்றுதா முடுத்த வம்பகைத் தெரிற்
சிறுவெள் ளாம்ப லல்லி யுண்ணும்
கழிகல மகளிர் போல
15வழிநினைந் திருத்த லதனினு மரிதே.

   திணை: பொதுவியல். துறை: ஆனந்தப்பையுள். மாறோக்கத்து
நப்பசலையார் பாடியது.

     உரை: என்னை மார்பில் புண்ணும் வெய்ய - என் தலைவனுடைய
மார்பிலுண்டாகிய புண்களும் பெரியவாயுள்ளன. நடுநாள் வந்து தும்பியும்
துவைக்கும் - நண்பகற்காலத்தே வந்து வண்டுகளும் மொய்த்து
ஒலிக்கின்றன;நெடுநகர் வரைப்பில் விளக்கும் நில்லா நெடிய மனையின்கண்
ஏற்றிவைத்த விளக்குகளும் நின்றெரியாமல் அவிந்து விடுகின்றன;
துஞ்சாக்கண் துயிலும் வேட்கும் - உறங்குதல் ஒழிந்த என் கண்களும்
உறக்கத்தை விரும்புகின்றன; அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும் -
அச்சத்தைத்தரும் கூகையும் தன் குழறு குரலெடுத்து ஒலியா நிற்கிறது;
நெல் நீர் எறிந்து விரிச்சியோர்க்கும் - நெல்லும் நீரும் சொரிந்து விரிச்சி
கேட்கும்; செம்முது பெண்டின் சொல்லும் நீரும் சொரிந்து விரிச்சி
கேட்கும்; செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா -செம்மையுடைய
முதுபெண்டானவள் சொல்லிய சொற்களும் குறையுடையவாயுள்ளன;
துடிய - துடி கொட்டுபவனே; பாண - பாண் மகனே; பாடுவல் விறலி -
பாடல்வல்ல விறலியே; என்னாகுவிர் கொல் -எங்ஙனமாவீர்களோ;
அளியீர் - இரங்கத்தக்கீர்; நுமக்கும் இவணுறை வாழ்க்கையரிது -
இதுகாறும் இருந்தாற்போல இவ்விடத்தே இருந்து வாழலாமென்பது
உங்கட்கும் இனி அரிதாம்; மண்ணுறு மழித்தலை தெண்ணீர் வார
- கழுவுகின்ற மொட்டையான தலையினின்றும் தெளிந்த நீர் ஒழுக;
தொன்று உடுத்த அம்பகைத் தெரியல் - முன்பு இளமைக் காலத்தில்
உடுத்த அழகிய பகைத்தழையா யுதவிய; சிறு வெள்ளாம்பல்
அல்லியுண்ணும் - சிறிய வெள்ளிய ஆம்பலிடத் துண்டாகும்
அல்லியரிசியை யுண்ணும்; கழிகல மகளிர்போல - கழித்த
அணிகலங்களையுடைய கைம்பெண்டிர்போல; வழி நினைந்திருத்தல்
அதனினும் அரிது - தலைவன் இறந்த வழிப் பின்னே வாழு் திறம்
நினைந்து யானும் இங்கே உயிர் வாழ்ந்திருப்பது அதனினும்
அரிதாம்; எ - று.


     உயிர்க்கிறுதி பயவா தொழியாத புண்களாதலால் “வெய்ய” என்றாள்.
தும்பி முதலியவற்றின் செயல் கூறியது தலைவன் சாக்காட்டினை
முன்னறிவிக்கும்  தீக்குறி.  இதுகாறும்  தலைவன்  தாணிலிழல்

வாழ்ந்தவராதலால்,