|       | மறவன்  ஒருவன்.          தலைவன்  வீழ்ந்தது  தெரிவிக்குங்கால், பாசறையில்         உள்ளவர்களே! நம் தலைவன் கையதாகிய வேல் துடி கொட்டுவோன்          கையில் உளது;தோலாகிய கேடயம் பாணன் கையில் உளது;அவன் சூடிய         மாலையும் வாடிவிட்டது; தலைவன் வே ல் மார்பில் ஊடுருவிப்போக, குருதி சோர நிலம் சேர்ந்தான்; சான்றோர்         பலரும் அவனைச் சூழ்ந்து நின்று          அவன் சால்பினைப் பாராட்டினர்; பாராட்டுமிடத்து, தலைவன் தன்னுடைய          நாட்டு மருத நிலத்தூர்களை முன்வந்த இரவலர்க் கீத்தொழிந்தான்,          இறுதிக்கண் வந்த இரவலர் தலைவனுக்கு எஞ்சிநின்ற கரம்பை மிக்க          சீறூரைக் கொடுத்தான் என்றனர்; அது கேட்டுத் தலைமகன் நாணித் தலை          கவிழ்ந்தான்; என்னே அவன் சால்பிருந்தவாறு என்று தெரிவித்தான்.          இதனை உடனிருந்து சேட்டார் அரிசில்கிழார். தலைவனது தலைமைப்       பண்பறிந்து பாராட்டும்         தானை வீரர் சொல் அவர்க்கு மிக்க வுவகையைத்          தந்தது. இப் பாட்டினைப் பாடினார். இதனுள் சில பகுதிகள் கிடைக்க          வில்லை. |   | பாசறை             யீரே பாசறை யீரே             துடியன் கையது வேலே யடிபுணர்             வாங்கிரு மருப்பிற் றீந்தொடைச் சீறியாழ்ப்             பாணன் கையது தோலே காண்வரக் |  | 5 | கடுந்தெற்று             மூடையின்... |  |   | வாடிய             மாலை மலைந்த சென்னியன்             வேந்துதொழி லயரு மருந்தலைச் சுற்றமொடு             நெடுநகர் வந்தென விடுகணை மொசித்த             மூரி வெண்டோள்... |  | 10 | சேறுபடு             குருதிச் செம்மலுக் கோஒ |  |   | மாறுசெறு             நெடுவேன் மார்புளம் போக             நிணம்பொதி கழலொடு நிலஞ்சேர்ந் தனனே             அதுகண்டு, பரந்தோ ரெல்லாம் புகழத் தலைபணிந்             திறைஞ்சி யோனே குருசில் பிணங்குகதிர் |  | 15 | அலமருங்             கழனித் தண்ணடை யொழிய |  |   | இலம்பா             டொக்கற் றலைவற்கோர்             கரம்பைச் சீறூர் நல்கின னெனவே. |  
    திணை:         வாகை. துறை: சால்புமுல்லை. அரிசில்கிழார் பாடியது.
       உரை:         பாசறையீரே பாசறையீரே - பாசறையில் உள்ளவர்களே          பாசறையில் உள்ளவர்களே; துடியன் கையது வேல் - துடிப்பறை          கொட்டுவேன் கையில் உளதாயிற்று வேல்; அடிபுணர் வாங்கு          இருமருப்பின் - அடிகாறும் புணர்க்கப்பட்ட வளைந்த கரிய          கோட்டினையும்; தீந்தொடை -இனிய இசையை யெழுப்பும் நரம்         பினையுமுடைய; சீறியாழ்ப் பாணன் கையது தோல் - சிறிய          யாழையுடைய பாணன் கையதாயிற்றுகேடயம்;  |