|       | |   | கேட்டியோ             வாழி பாண பாசறைப்             பூக்கோ ளின்றேன் றறையும் |  | 10 | மடிவாய்த்             தண்ணுமை யிழிசினன் குரலே. |  |   | ..............கழாத்தலையார்             பாடியது. |  
      உரை:         ஈரச் செவ்வி உதவினவாயினும் - ஈரமாகிய பருவம்          கழிவதன்முன் உழுதற்கு உதவிசெய்தனவெனினும்; பல்லெருத்துள்ளும்          நல்லெருது நோக்கி - பலவாகிய எருதுகளுள்ளும் நல்ல எருதுகளையே          தேர்ந்து கொள்வானாய்; வீறு வீறாயும் உழவன் போல - வேறு வேறாக          வைத்து ஆராய்ந்து தேரும் உழவனைப்போல; பீடு பெறு தொல் குடிப்பாடு          பல தாங்கிய மூதிலாளருள்ளும் - பெருமை பெற்ற பழைமையான குடியில்          பிறந்தாரிடத்து    வழிவழிடிப்பட்டுவரும்    நற்பண்புகளனைத்தையும்                  சோர்வுபடாது   காத்துவரும்   முதுகுடி   மறவருள்ளும்;           காதலின் -          தன்பாலுள்ள அன்பால்; தனக்கு  முகந்தேந்திய  பசும்பொன் மண்டை - தனக்காக முகந்தெடுத்துத் தந்த பசும்         பொன்னாலாகிய மண்டையிலுள்ள          கள்ளை; இவற்கு ஈக என்னுமது - தன்னருகேயுள்ள இவனைக்  காட்டி          இவ்  வீரனுக்கு நல்குவாயாக வெனச் சொல்லிச் செய்யும் அச் சிறப்பை;         அன்றி சின்- மனங்கொண்டு வியத்தலை யொழி; பாண-பாணனே; பாசறை          - பாசறையிடத்தே; பூக்கோள் இன்று என்று அறையும் - போர்க்குரிய          மறவர்க்குப்  போர்ப்பூவைத்  தரும்  பொழுது  இப்போழுது  என்று தெரிவியாநிற்கும்;   இழிசினன்   மடிவாய்த்           தண்ணுமை   குரல்          கேட்டி - புலையன் இசைக்கும் தோலை மடித்துப் போர்த்த          வாயையுடைய தண்ணுமையின் ஓசையைக் கேட்பாயாக; எ - று.
               நல்லெருது ஆயும் உழவன் போல வேந்தன் இவனை ஆய்ந்து                  தேர்ந்து தனக்கு முகந்தேந்திய மண்டையை இவற்கீக என்னுமது          அன்றிசின்;பாண, தண்ணுமைக்  குரலைக்  கேட்டி  என           வினைமுடிவு செய்க.அவனைத் தேர்ந்துகொண்டிதற்குக்  காரணம்          கூறுவார்,  காதலின்  என்றும், சிறந்தார்க்கன்றிப்  பிறர்க்குக்                   கொடுக்கப்படாதென்றற்குப் பசும்பொன் மண்டை என்றும் கூறினார்.         அதுவும் என்புழி உம்மை, சிறப்பு. அன்றுதல், மறுத்தல்;அன்றி நின்ற         அவுணர்  (ஞானசம். 29, 7) என்று சான்றோர் வழங்குதல் காண்க. சின்:                  முன்னிலையசை. தன்னை வற்புறுத்தாமை வேண்டிப் பாணனை  வேறுபட          அழைத்துப் பூக்கோளேய தண்ணுமைக்  குரலைக் கேட்பித்தான் என அறிக.          கள்ளினும் பூக்கோளைச் சிறப்புற நோக்குதலும், தன் முன்னே தான் பெறும்          சிறப்புக்கு நாணுதலும், தொல் குடிப்பாடு.
               விளக்கம்:         உழவுவினை வென்றியுற முடிதற்கு உழவன் நல்லெருது          தேர்ந்து கோடல்போல, வேந்தனும் வினைக்குரியாரை ஆராய்ந்து          தேர்ந்துகோடல் இன்றியமையாதாகலின், வீறு வீறாயும் உழவன் போல          என்றார்; அரசன் வினைக்குரியாரைத் தேர்ந்துகொள்ளும் முறையைத்       திருவள்ளுவர்,  |