| பண்ணற்கு விரைதி நீயே நெருதை | 5 | எம்முற் றப்பியோன் றம்பியொ டொராங்கு | | நாளைச் செய்குவெ மைரெனக் கூறிப் புன்வயி றருத்தலுஞ் செல்லான் பன்மான் கடவு மென்ப பெரிதே யதுகேட்டு வலம்படு முரசின் வெல்போர் வேந்தன் | 10. | இலங்கிரும் பாசறை நடுங்கின் | | றிரண்டா காதவன் கூறிய தெனவே. |
திணையும் துறையு மவை. அரிசில்கிழார் பாடியது.
உரை: கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி - வளைத்த குழையணிந்த தேவியர் மாலை சூட்டி மகிழ்விக்க; நடுங்கு பனிகளைஇயர் நாரரி பருகி - நடுக்கத்தைச் செய்யும் குளிரைப் கோக்குதற்காக நாரால் வடிக்கப்பட்ட நறவையுண்டு; வளி தொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி - காற்றின் கடுமையைத் தனக்கு நிகராகாமை செய்யும் வளவிய, செலவையுடைய குதிரையை; பண்ணற்கு விரைதி நீ - போர்க்கேற்பச் சமைத்தற்கு விரைகின்றாய் நீ; நெருதை - நேற்று; என் முன் தப்பியோடும்; நாளை ஒராங்கு செய்குவென் அமர் எனக் கூறி- நாளை ஒருசேரப் பொருது அழிப்பேன் என்று வஞ்சினம் கூறி; புன் வயிறு அருத்தலும் செல்லான் - வயிற்றுப் பசிதீரச் சிறிதுணவு தானும் உண்ணானாய்; பன்மான் பெரிது கடவும் என்ப - பல குதிரைகளையும் பெரிதும் ஆராய்கின்றான் என ஒற்றர் கூறுவர்; அது கேட்டு - அவ் வொற்றுரை கேட்டு; வலம்படு வெல்லும் போரையுமுடைய வேந்துனுடைய; இலங்கிரும் பாசறை - விளங்குகின்ற பெரிய பாசறையிலுள்ளார்; அவன் கூறியது இரண்டாகாதென நடுங்கின்று - அவன் கூறிய வஞ்சினம் சொல்வேறு செயல்வேறென இரண்டாகாதென்று நடுங்குகின்றனர்; எ - று. சூட்டி யென்றதனைச் சூட்டவெனத் திரிக்க. தன்னையுண்டார்க்கு வெம்மை யுண்டுபண்ணுவதுபற்றிக் கள்ளுண்டதனை, நடுங்குபனிகளைஇயர் நாரரி பருகி யென்றார்.அமர்செய்குவனென்றது, அமரில் கொல்வேனென்னும் குறிப்பிற்று. இருவரையும் கொன்றல்லது உணவு கொள்ளேனென்னும் குறிப்பிற்று. இருவரையும் கொன்றல்லது உணவு கொள்ளேனென வஞ்சினம் கூறினமை விளங்க ‘புன்வயிறருத்தலும் செல்லான்; என்றார். உணவினது புன்மை வயிற்றின் மேனின்றது. புன்மை ஈண்டுச் சிறுமை மேற்று. பகைவேந்தனை வலம்படு முரசின் வெல்போர் வேந்தன் என்றது இகழ்ச்சிக் குறிப்பு. நீ சூட்டப்பருகி விரைதி; கடவும்
|