| 10 | பெறாது பெயரும் புள்ளிமை போலநின் | | நசைதர வந்துநின் னிசைநுவல் பரிசிலேன் வறுவியேன் பெயர்கோ வாண்மேம் படுந ஈயா யாயினு மிரங்குவே னல்லேன் நோயிலை யாகுமதி பெரும நம்முட் | 15 | குறுநணி காண்குவ தாக நாளும் | | நறும்ப லொலிவருங் கதுப்பிற் றேமொழித் தெரியிழை மகளிர் பாணி பார்க்கும் பெருவரை யன்ன மார்பிற் செருவஞ் சேஎய்நின் மகிழிருக் கையே. |
திணை: அது துறை: பரிசில் கடாநிலை. மூவன் பரிசில் நீட்டித் தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
உரை: பொய்கை நாரை - பொய்கைக்கண் மேய்ந்த நாரை; போர்வில் சேக்கும் - போரின்கண்ணே யுறங்கும்;நெய்தலங் கழனி நெல்லரி தொழுவர்- நெய்தலையுடைய அழகிய வயற்கண் நெல்லை யறுக்கும் உழவர்; கூம்புவிடுமென்பிணி அவிழ்ந்த ஆம்பல் அகல் அடை - முகை யவிழ்கின்ற மெல்லிய இதழ்கள் நெகிழ்ந்த ஆம்பலினது அகன்ற இலையதனாலே; அரியல் மாந்தி -மதுவை யுண்டு; தெண்கடல் படுதிரை இன்சீர்ப்பாணி தூங்கும் - தெளிந்த கடலினது ஒலிக்கும் திரையின் இனிய சீராகிய தாளத்தேயாடும்; மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந-மென்புலத்தூர் களையுடைய நல்ல நாட்டுக்கு வேந்தே; பல்கனி நசைஇ- பல பழத்தையும் நச்சி;அல்க விசும்பு உகந்து - தாம் வாழ்வதற்கிடமாகிய ஆகாயத்தின்கண்ணே உயரப் பறந்து; பெருமலை விடரகம் சிலம்ப முன்னி -பெரிய மலையின் முழைஎதிரொலி முழங்கச்சென்று; பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக் கையற்று - அவ்விடத்துப் பழமுடைய பெரிய மரம் பழுத்து மாறிற்றாக வருந்தி; பெறாது பெயரும் புள்ளினம்போல -பழம் பெறாதே மீளும் புள்ளினத்தை யொப்ப; நின் நசைதர வந்து - நினது நச்சப்படுந்தன்மை கொடுவர வந்து; நின் இசை நுவல் பரிசிலேன் - நின் புகழைக்கூறும் பரிசிலேன் யான்; வறுவியேன் பெயர்கோ- வறியோனய் மீளக்கடவேனோ; வாள் மேம்படுந - வாட்போரின்கண் மேம்படுவோய்; ஈயாய் ஆயினும் இரங்குவேன் அல்லேன் - நீ ஒன்றை ஈத்திலையாயினும் யான் அதற்கு வருந்துவேனல்லேன், நோயிலை யாகுமதி - அதுநிற்க நோயின்றிருப்பாயாக; பெரும் நம்முன் குறுநணி காண்குவதாக - பெரும நம்மிடத் துளதாகிய அணிய அணுமையைக் காண்பதாக; நாளும் - நாடோறும்; நறும்பல் ஒலிவரும் கதுப்பின் - நறிய பலவாகிய தழைத்த மயிரையும்; தேமொழித்தெரியிழை மகளிர் - தேன்போலும் |