|       | பாய்ந்தோடும், என           அவ் வன்புலத்தியல்பை இப் பாட்டில் அழகுறக்            கூறியுள்ளார்.
               |   | உழுதூர்               காளை யூழ்கோ டன்ன               கவைமுட் கள்ளிப் பொரியரைப் பொருந்திப்               புதுவர கரிகாற் கருப்பை பார்க்கும்               புன்றலைச் சிறாஅர் வில்லெடுத் தார்ப்பிற் |               |  5. | பெருங்கட்               குறுமுயல் கருங்கல னுடைய |               |   | மன்றிற்               பாயும் வன்புலத் ததுவே               கரும்பி னெந்திரஞ் சிலைப்பி னயல               திருஞ்சுவல் வாளை பிறழு மாங்கட்               டண்பணை யாளும் வேந்தர்க்குக் |  |  10.  | கண்படை               யீயா வேலோ னூரே |  
      திணையும்           துறையு மவை. ஆவூர் கிழார் பாடியது.
                 உரை:           உழுதூர் காளை யூழ்கோடு அன்ன - நிலத்தை யுழுததனால் ஓய்ந்த நடை கொண்டு  செல்லும்            காளையின்  தலையில்  முளைத்த            கொம்புபோல்; கவைமுள் கள்ளி பொரியரைப் பொருந்தி - கவைத்த            முட்களையுடைய கள்ளி மரத்தின் பொரிந்த அடிப் பகுதியைப் பொருந்தி            யிருந்து; புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும் - புதிது விளைந்த வரகை            யரிந்தபின்      உண்டாகிய அரிகாலின்கண் வந்து மேயும் எலியைப்      பிடிப்பதற்குச்           செவ்விபார்க்கும்; புன்றலைச் சிறாஅர்  வில்லெடுத்  தார்ப்பின்  புல்லிய தலையையுடைய சிறுவர்கள்  கையில்  வில்லையெடுத்துக்             கொண்டு            ஆரவாரிப்பராயின; பெருங்கண் குறு முயல் - பெரிய கண்ணையுடைய            குறுமுயல்; கருங்கலன் உடைய மன்றில் பாயும் - கரிய புறத்தையுடைய            மட்கலங்கள் உருண்டுடைந்து கெடமன்றிலே பாய்ந்தோடும்; வன்புலத்தது -            வன்புலத்தின்  கண்ணே  யுளது;  கரும்பின்  எந்திரம்  சிலைப்பின்           -            கரும்பாட்டும்  ஆலை  யொலிக்குமாயின்;  அயலது  -            அயலதாகிய            நீர்நிலையிலுள்ள; இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண் - பெரிய            பிடரையுடைய வாளைமீன்கள் துள்ளிப் பாயும் அழகிய இடத்தையுடைய;            தண்பணையாளும் வேந்தர்க்கு - குளிர்ந்த மருதநிலத்தூர்களை யாட்சி            செய்யும் அரசர்கட்கு; கண்படை ஈயா வேலோன் ஊர் - கண்ணுறக்கத்தை            யெய்தாமைக் கேதுவாகிய அச்சத்தைத் தரும் வேலையுடையவன் ஊர்;            எ - று.
                 ஊர் வன்புலத்தது என விளை முடிவு செய்க. கொம்பு முளையாத                      இளங்காளைகளை உழுதற்குப்பயன்படுத்தாராகலின், உழுதூர் காளையூழ்            கோடு என்றார்; ஊர்தல், ஓய்ந்து நடத்தல். ஊழ்கோடென்றார். எருத்திலிட்ட            நுகம் முகத்தே சரியாதவாறு தாங்கும் அளவாகத் தோன்றிய கோடு என்பது            விளக்குதற்கு.  பொரித்தாற்போல்  பொருக்குடைய  அரை,  பொரியரை                      யெனப்பட்டது. புதுவரகறிந்த அரிகாலில் உதிர்ந்து கிடக்கும்  |