இதன்கண் அவனது ஊர் நலமும் கொடை நலமும் குறிக்கப்பட்டுள்ளன. தலைவன் பெயர் தெரியவில்லை. | களிறுநீ றாடிய விடுநில மருங்கின் வம்பப் பெரும்பெயல் வரைந்துசொழிந் திறந்தெனக் குழிகொள் சின்னீர் குராஅ லுண்டலிற் சேறுகிளைத் திட்ட கலுழ்கண் ணூறல் | 5. | முறையி னுண்ணு நிறையா வாழ்க்கை | | முளவுமாத் தொலைச்சிய முழுச்சொலாடவர் உடும்பிழு தறுத்த வொடுங்காழ்ப் படலைச் சீறின் முன்றிற் கூறுசெய் திடுமார். | 10. | மறுகுடன் கமழு மதுகை மன்றத் | | தலந்தலை யிரத்தி யலங்குபடு நீழற் கயந்தலைச் சிறாஅர் கணைவிளை யாடும் அருமிளை யிருக்கை யதுவே வென்வேல் வேந்துதலை வரினுந் தாங்கும் | 15. | தாங்கா வீகை நெடுந்தகை யூரே. |
திணையும் துறையு மவை. உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.
உரை: களிறு நீறாடிய விடுநில மருங்கில் - பன்றிகளால் புழுதியாக் கப்பட்ட விடுநிலத்தின்கண்; வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்தென - புதிதாக வந்த பெருமழை அவ்விடத்தை வரைந்துகொண்டு பெய்து நீங்கிற்றாக; குழிகொள் சின்னீர் குரால் உண்டலின் - பள்ளங்களில் தங்கிய சிறிதாகிய நீரைக் கன்றையுடைய பசுவானது ஆங்கே முளைத்திருந்த புல்லை மேய்ந்து உண்டொழிதலால்; சேறு கிளைத்திட்ட கலுழ்கண்ணூறல் - சேற்றை நீக்கித் தோண்ட வூறிய கலங்கலாகிய நீரை; முறையின் உண்ணும் - முறை முறையாகச் சென்று முகந்துண்ணும்; நிறையா வாழ்க்கை - நிரம்பாத வாழ்க்கையுடை; முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல்லாடவர் - முள்ளம் பன்றியைக் கொன்ற முழுத்த சொல்லையுடைய வீரர்; அறுத்த உடும்பிழுது - அறுத்தெடுத்த உடும்பின் தசையை; ஒடுங்காழ்ப் படலைச் சீறின் முன்றில் - ஒடு மரத்தின் வலிய கழிகளாற் செய்யப்பட்ட படல் சார்த்தப்பட்ட சிறிய மனை முற்றத்தில்; கூறு செய்திடுமார் - பகுத்தளித்தற் பொருட்டு; கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம் - நெருப்பில் வேகவைத்த கொழுவிய நிணத்தின் மணம்; மறுகுடன் கமழும் - தெருவெல்லாம் மணக்கும்; மதுகை மன்றத்து அலந்தலை இரத்தி அலங்கு படு நீழல் - வலிய மன்றத்தில் நிற்கும் உலர்ந்த தலையையுடைய |