| 5. | பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக் | | கவிர்ப்பூ நெற்றிச் சேவலிற் றணியும் அருமிளை யிருக்கை யதுவே மனைவியும் வேட்டைச் சிறாஅர் சேட்புலம் படராது படுமடைக் கொண்ட குறுந்தா ளுடும்பின் | 10. | விழுக்கு நிணம் பெய்த தயிர்க்கண் விதவை | | யாணர் நல்லவை பாணரொ டொராங்கு வருவிருந் தயரும் விருப்பினள் கிழவனும் அருஞ்சமந் ததையத் தாக்கிப் பெருஞ்சமத் தண்ணல் யானை யணிந்த | 15. | பொன்சே யோரைடப் பெரும்பரி சிலனே. |
திணை: வாகை. துறை: மூதின்முல்லை. தங்காற் பொற்கொல்லனார் பாடியது.
உரை: ஊர் முதுவேலி பார்நடை வெருகின் இருட்பகை வெரீஇய நாகு இளம் பேடை - ஊரிலுள்ள பழையதாகிய வேலியடியில் தங்கும் மெத்தென்ற நடையையுடைய காட்டுப் பூனையாகிய இருளில் வந்து வருத்தும் பகைக்கு அஞ்சிய மிக்க இளமை பொருந்தி பெட்டைக்கோழி; உயிர் நடுக்குற்று புலா விட்டரற்ற-உயிர்ப்பும் நடுக்கமும் கொண்டு தொண்டைத் தசையைத் திறத்து கூவி; சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த - பக்கங்களையும் குப்பைகளையும் புடைத்து நீக்குவாளாய் எழுந்திருந்த; பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கத்து - பருத்தி நூற்கும் பெண்டினுடை சிறிய விளக்கொளியில்; கவிர்ப்பூ நெற்றிச் சேவலின் தணியும் - முருக்கம்பூவை யொத்த கொண்டைமையுடைய சேவற் கோழியைக் கண்டு அச்சம் தணியும்; அருமிளை இருக்கையது - சிறுவர்கள்; செண்புலம் படராது - நெடுந்தொலைவு செல்லாமல்; படுமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின் - மடுக்கரையில் பிடித்துக்கொண்டுவந்த குறுகிய காலையுடைய உடும்பினது; விழுக்கு நிணம் பெய்த தயிர்க்கண் விதவை - விழுக்காகிய தசையைப் பெய்து சமைக்கப் பட்ட தயிரோடு கூடிய கூழையும்; யாணர் நல்லவை - புதியவாக வந்த வேறு நல்ல உணவுப்பொருளையும், பாணரொடு வருவிருந்து ஓராங்கு அயரும் விருப்பினள் - பாணருக்கும் அவரொடு வந்த ஏனை விருந்தினர்க்கும் ஒரு சேரக் கொடுத்து உண்பிக்கும் அவரொடு விருப்பமுடையளாயுள்ளாள்; கிழவனும் - அவள் கணவனும், அருஞ்சமம் ததையத் தாக்கி - கடத்தற்கரிய போர் கெடும்படியாகத் தாக்கி; அணிந்த பெரும்போரில் தலைமையையுடைய |