பக்கம் எண் :

263

     
 சிறிது புறப்பட்டன் றேவில டன்னூர்
வேட்டக் குடிதொறுங் கூட்டு........
 15. ....................உடூம்புசெய்
 பாணி நெடுந்தேர் வல்லரோ டூரா
வம்பணி யானை வேந்துதலை வரினும்
உண்பது மன்னு மதுவே
பரிசின் மன்னுங் குரிசில்கொண்டதுவே.

     திணையும் துறையு மவை................

     உரை:நீருட் பட்ட மாரிப் பேருறை மொக்குள் அன்ன நீர்க்குள்
வீழ்ந்த மழையினுடைய பெரிய தாரையாலுண்டாகிய குமிழிபோல; பொகுட்டுவிழிக்
கண்ண - கொட்டை போன்ற விழி பொருந்திய
கண்ணையும்; கரும்பிடர்த் தலைய - கரிய பிடரி பொருந்திய தலையையும்;
பெருஞ்செவிக்  குறுமுயல் - பெரிய செவியையு  முடைய  குறுமுயல்;
உள்ளூர்க் குறும்புதல் துள்ளுவன் உகளும் - ஊருக்குள்ளேயிருக்கும் குறிய
புதலிடத்தே துள்ளி விளையாடும்; தொள்ளை மறைத்து ஆங்கண் படரின்
-  வளைகள்   பொருந்திய மன்றத்துக்குச் சென்றால்; உண்கென உணரா
உயவிற்றாயினும் - உண்மின் எனக் குறிப்புணர்ந்துரைப் பதல்லாத
வருத்தமுடையதாயினும்; நன்றும் தங்கினிர் சென்மோ - பெரிதும் தங்கிச்
செல்வீர்களாக;  புலவீர் - அறிஞரகளே; சென்றதற் கொண்டு -
சென்றதனால்; மனையோள் விரும்பி - மனையவள் விருப்பமுற்று; வரகும்
தினையும் உள்ளவை யெல்லாம் - வரகும் தினையுமாகத் தன் மனையில்
உள்ளவற்றை யெல்லாம்; இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென -
இரவலர் உண்டதனாலுங் கொண்டதனாலும் தொலைந்தனவாக; குறித்துமாறு
எதிர்ப்பை பெறாமையின் - குறி யெதிர்ப்பைத் தானும் பெறமுடியாமையால்;
குரல் உணங்கு விதைத்தினை - கதிரிடத்தே முற்றி யுலரவிட்ட
விதைத்தினையை; உரல்வாய்ப் உரல்வாய்ப் பெய்து - உரலிடத்தே
பெய்து குற்றி யுண்பிப்பாளே யல்லது; சிறிது புறப்பட்டன்றோ விலள்
- சிறிதும் இன்மை கூறி நீவிர் வறிதேகுமாறு விடவாளல்லள்; தன்னூர்
வேட்டக்குடி தொறுங் கூட்டும் - தன்னூரிலுள்ள வேட்டுவர் மனைதோறும்
கூட்டப்படும்; ...உடும்பு செய் பாணி நெடுந்தேர் வல்லரோடு - உடும்பின்
தோலாற் செய்யப்பட்ட கைச்சரடு அணிந்த நெடிய தேரைச் செலுத்தவல்ல
வீரருடனே; ஊரா - ஊர்ந்து; வம்பணி யானை வேந்து தலைவரினும் -
கச்சணிந்த யானையையுடைய வேந்தர் தன்பால் வந்தாலும்; உண்பதும்
அதுவே - உண்பிப்பது அதுவேயாம்; பரிசில் - அவன் தன்பால் வரம்
பரிசிலர்க்கு