| | கொற்ற வேந்தர் வரினுந் தற்றக வணங்கார்க் கீகுவ னல்லன்வண் டோட்டுப் | 10. | பிணங்குகதிர்க் கழனி நாப்ப ணேமுற் | | றுணங்குகல னாழியிற் றோன்றும் ஓரெயின் மன்ன னொருமட மகளே. |
உரை: வண்தோட்டுப் பிணங்கு கதிர் கழனி நாப்பண் - வளவிய தோட்டினையும் ஒன்றோடொன்று தம்மிற் பின்னிக் கிடக்கும் கதிர் களையுமுடைய கழனிகட்கு நடுவே; ஏமுற்று உணங்கு கலன் ஆழியின் தோன்றும் - கரையிற் பிணிக்கப்பட்டு உலர்ந்து தோன்றும் மரக்கலமும் கடலும்போலக் காட்சியளிக்கும்; ஓர் எயிர் மன்னன் ஒரு மடம்களே - ஒற்றை மதில் சூழ்ந்த நகரிடத்தேயுள்ள வேந்தனுடைய இளையளாகிய ஒரு மகள்; ஏர் பரந்த வயல் - ஏர்கள் உழுத வயல்களையும்; நெல் மலிந்த மனை - நெல் நிரம்பிய வீடுக ளையும்; பொன் மலிந்த மறுகின் - பொன் நிறைந்த தெருக்களையும்; படுவண்டு ஆர்க்கும் பன்மலர்க் காவின் - மொய்க்கின்ற வண்டுகள் ஒலிக்கும் பலவாகிய மலர்களையுடைய சோலைகளையுமுடைய; நெடுவேள் ஆதன் போந்தை யன்ன - நெடுவேள் ஆதன் என்பானது போந்தை யென்னும் ஊரைப்போன்ற; பெருஞ்சீர் அருங்கொண்டிள் - பெருத்த சீருடனே அரும்போர் உடற்றிப் பகைவரிடத்தே கொண்ட செல்வமுடையவளாவள்; கருஞ்சினை வேம்பும் - கரிய கொம்புகளையுடைய வேப்பமாலையும்; ஆரும் - ஆத்தி மாலையும்; போந்தையும் மூன்றும் - பனந்தோட்டு மாலையுமாகிய மூன்றையும்; மலைந்த சென்னியர் - சூடிய தலையையுடையராய; அணிந்த வில்லர் - வரிந்து கட்டப்பட்ட வில்லையுடையராய்; கொற்ற வேந்தர் வரினும் - வெற்றி மிக்க முடி வேந்தர் மூவரும் மகட்கொடை வேண்டி வந்தாலும்; தன் தகவணங்கார்க்கு ஈகுவனல்லன் - தன் தகுதிக்கேற்பத் தன்னை வணங்கி இரந்து கேட்டார்க்கல்லது இவள் தந்தை தகுதிக்கேற்பத் தன்னை வணங்கி இரந்து கேட்டார்க்கல்லது இவள் தந்தை இவள் மகட்கொடை நேரான்; எ - று.
பள்ளப்பாங்கான நன்செய் வயலென்னும், மேட்டுப்பாங்கு செறுவென்றும் தெரிந்துணர்க. வயலும் செறுவும் மனயைும் மறுகும் காவுமுடைய போந்தையென இயையும். பெருஞ்சீரும் அரிய போர் செய்து பகைவரிடத்தே கொண்ட பெருஞ்செல்வமும் தன் மகட்குத் தந்தையால் தரப்படுதலின், பெருஞ்சீரருங் கொண்டியள் என்றார்; இனி, பெரிய சீருடனே கோடற்கரிய கொள்மகளாயினளெனினுமாம். கொள்மகள், மணந்து கோடற்கரிய கொள்மகளாயினளெனினுமாம். கொள்மகள், மணந்து கோடற்குரிய செவ்வியெய்தினவள். ஓரெிற்குக்கலுனும், கழனிக்கு ஆழியும் உவமம். செல்லும்வலியழிந்தமையின் கரையிற பிணிக்கப்பட்டிருக்கும், |