பக்கம் எண் :

277

     
 5.நெடுநீர்ப் பரப்பின் வானையொ டுகளுந்து
 தொடலை யல்குற் றொடித்தோண் மகளிர்
கடலாடிக் கயம்பாய்ந்து
கழிநெய்தய் பூக்குறூஉந்து
பைந்தழை துயல்வருஞ் செறுவிற் றதைந்த
 10..............................கலத்தின்
 வளர வேண்டு மவளே யென்றும்
ஆரம ருழப்பது மமரிய ளாகி
முறஞ்செவி யானை வேந்தர்
மறங்கெழு நெஞ்சம் கொண்டொளித் தோளே.

     திணையும் துறையுமவை...

     உரை: வியன் புலம் படர்ந்த  பல்லா நெடு  வேறு - அகன்ற புல்
வளர்ந்த நிலத்திற் பரந்து மேய்ந்த பல  ஆக்களோடு  கூடிய  நெடிய
ஆனேறுகள்; மடலை மாணிழல் அசைவிட - பூக்களை யுடைய மரங்கள்
பயந்த பெரிய நீழவில் தங்கி யசையிடாநிற்க; கோவலர் தீதை முல்லைப் பூப்
பறிக்குந்து - கோவலர் பூக்கள்   நெருங்கிய   முல்லையினுடைய பூவைப்
பறிக்கும்; குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல் - குறுகிய கோலால்
எறியப் பட்ட நெடிய காதுகளையுடைய குறுமுயல், நெடுநீ்ர்ப் பரப்பின்
வாளையொடு உகளுத்து - ஆழ்ந்த நீர்நிலையிலுள்ள வாளை மீன்களோடு
ஒப்பத் துள்ளித் தாவும்; தொடலை மல்குல் தொடித்தோள் மகளிர் - மேகலை
யணிந்த அல்குலையும் தொடியணிந்த தோளையுமுடைய பெண்கள், கடலாடி -
கடல் நீரில் விளையாடி; கயல் பாய்ந்து - கானற் சோலையிலுள்ள குளத் தில்
மூழ்கி; கழி நெய்தற் பூக்குறூஉந்து - கழியிடத்துப் பூத்த நெய்தய் பூக்களைப்
பறிக்கும்; செறுவில் ததைந்த வயலிடத்தே நெருங்கயி; பைத்தழை துயல் வரும்
- பசிய தழை யசையும்;..........கலத்தின் -  ............கலத்தைப்போல;  அவள்
என்றும்  வளரவேண்டும் -  எப்போதும்  அவள்   வளரவேண்டியவளாக
இருத்தலை இவ்வூரவர் வேண்டாநிற்பர்; ஆரமர் உழப்பதும் அமரியளாகி -
தன்  பொருட்டு    வேந்தர்கள்    கடத்தற்கரிய   போர்   செய்வதை
விரும்பினவள்போல்; முறஞ்செவி  யானை  வேந்தர் -   முறம்போலும்
செவியையுடைய யானைகளையுடைய வேந்தர்களின்; மறங்கெழு நெஞ்சம்
கொண்டடொளித்தோள் - மறம் பொருந்திய நெஞ்சைக் கவர்ந்து புறத்தே
எவரும் காணாவாறு ஒளித்துக்கொண்டாளாகலான்; எ - று.


     ஒளித்தாளாகலான், வளரவேண்டும் என வினைமுடிவு செய்க.
ஒளித்தாள் என்புழி ஆகாரம் செய்யுளாகலின் ஓவாயிற்று. பறிக்கும்,
உகளும்,