| வேந்துகுறை யுறவுங் கொடாஅ னேந்துகோட் டம்பூந் தொடலை யணித்தழை யல்குல் செம்பொறிச் சிலம்பி னிளையோட டந்தை எழுவிட் டமைத்த திண்ணிலைக் கதவின் |
5. | அரைம ணி்ஞ்சி நாட்கொடி நுடங்கும் |
| ................. புலிக்கணத் தன்ன கடுங்கட் சுற்றமொடு மாற்ற மாறான மறலிய சினத்தன் பூக்கோ ளெனவேஎய்க் வேளா மெல்லியற் |
10. | விளங்கிழைப் பொலிந்த வேளா மெல்லியற் |
| சுணங்கணி வனமுலை யவளொடு நாளை மணம்புகு வைக லாகுத லொன்றோ ஆரம ருழக்கிய மறங்கிளர் முன்பின் நீளிலை யெஃக மறுத்த வுடம்பொடு |
15. | வாரா வுலகம் புகுத லொன்றெனப் |
| படைதொட்ட டனனே குருசி லாயிடைக் களிறுபொரக் கலங்கிய தண்கயம் போலப் பெருங்கவி னிழப்பது கொல்லோ மென்புல வைப்பினித் தண்பணை யூரே. |