| | கழிபிணம் பிறங்குபோர் பழிகளி றெருதா வாடக வைகலு முழக்கும் | 15. | மாட்சியர் மற்றிவ டன்னை மாரே. |
திணையும் துறையும் அவை. அரிசில்கிழார் பாடியது.
உரை: கானக் காக்கைக் கலிச்சிற கேய்க்கும் - காட்டுக் காக்ககையின் தழைத்த சிறகையொத்த; மயிலைக் கண்ணிப் பெருந்தோள் குறுமகள் - இருள்வாசிப்பூவாற் றொடுக்கப்பட்ட கண்ணியையும் பெரிய தோளையுமுடைய இளையவள்; இவள் ஏனோர் மகள்கொல் என விதுப்புற்று - இவள் மறப்பண்பில்லாத பிறருடைய மகளாவாள்போலும் எனக் கருதி வேட்கையால் விரைவுற்று; என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை - என்னைக் கேட்கும் வெற்றிபொருந்திய வேலையுடைய நெடுந்தகையே; திரு நயத்தக்க பண்பின் இவள் நலன் - திருமகளும் விரும்பத்தக்க நற்பண்புடைய இவளது நலம்; பொருநர்க்கல்லது பிறர்க்கு ஆகாது - போர்மறவர்க்குரியதேயன்றிப் பிறருக்கு எய்துவதரிது, பைங்கால் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை - பசிய காலையுடைய கொக்கினது அகன்ற வாயையுடைய குஞ்சு; மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதற்பின்- மெத்தென்ற சேறு பொருந்திய அடைகரையில் மேயும் மீன்களை மேய்ந்துண்டபின்; ஆரல் ஈன்ற ஐயவி முட்டை - ஆரல்மீன் ஈன்ற ஐயவிக் கடுகு போன்ற முட்டையையும்; கூர்நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம்- மிகவும் நல்ல இறாமீனின் குஞ்சுகளையும் தாய் தரப் பெற்றுண்ணும்; தண்பணைக் கிழவன் இவள் தந்தைமயும் - தண்ணிய மருதநிலத்தூர்களுக்குத் தலைவனாவன் இவளுடைய தந்தையும்; இவள் தன்னைமார் - இவளு டைய உடன்பிறந்தோர்களும்; வேந்தரும் பெறாமையின் - வேந்தர்களும் தாம் மகட்கொடை பெறாமையால்; பேரமர் செய்தலின் - பெரிய போரைச் செய்தலால்; கழிபிணட்ம பிறங்கு அழிபோர்பு -போரிற் கழிந்தோருடைய பிணக்குவியல் உயர்ந்தவைக் கோற்போராகவும், களிறு அழி எருதா - களிற்றியானைகள் வைக்கோலை மிதித்தொதுக்கும் எருதுகாளகவும்; வாள் தக - தமது வாளாண்மைக்கேற்ப; வைகலும் உழக்கும் மாட்சியர் - நாடோறும் வாளுழவு செய்யும் மாண்புடையராவர்; எ - று.
காட்டுக் காக்கை. கள்ளிக் காக்கையெனவும் வழங்கும் மறமாண் புடைய தந்தை தன்னையரை எடுத்தோதுதலின், அஃதில்லாரை ஏனோர் என்றார். வேட்கை மிகுதியால் உள்ளத்தெழும் விரைவுத் துடிப்பு, விதுப்பெனப்படும்; அது கட்பார்வையிலும், சொற்செயல்களினும் மெய்ப்பட்டுத் தோன்றும் உருவும் குணமும் தொழிலும் அகப்படப் பண்பு என்றார் பொருநர், மறக்குடிப்பிறப்பும் பேராண்மையும் உடையராய், |