பக்கம் எண் :

290

     
 களிறணைப்பக கலங்கின, காஅ
கேரோடத் துகள்கெழுமின, தெருஅ
மாமறுகலின் மயக்குற்றன, வழி
கலங்கழா அலிற், றுறை கலக்குற்றன
 5.தெறன்மறவ ரிறைகூர்தலிற்
 பொறைமலிந்து நிலனெளிய
வந்தோர் பலரே வம்ப வேந்தர்
பிடியுயிர்ப் பன்ன கைகவரிரும்பின்
ஒவுற் ழிரும்புறங் காவல் கண்ணிக்
 10. கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை
 மைய னோக்கிற் றையலை நயந்தோர்
அளியர் தாமேயிவ டன்னை மாரே
செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி
நிரலல் லோர்க்குத் தரலோ வில்லெனக்
 15.கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர்
 குழாஅங் கொண்ட குருதியம் புலவொடு
கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்
இன்ன மறவர்த் தாயினு மன்னோ
என்னா வதுகொ றானே
20.பன்னல் வேலியிப் பணைநல் லூரே.

     திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

     உரை: தெறல் மறவர் இறை கூர்தலின் - பொருதலை யியல்
பாகவுடைய மறவர் வந்து தங்குதலால்; கா களிறு அணைப்புக் கலங்கின
- காவிலுள்ள மரங்களில் களிறுகளைக் கட்டுவதால் அவற்றால் திமிரப்பட்டு
நிலைகலங்கின; தேர்ஒட தெருவு துகள் கெழுமின்- தேர்கள் செல்லுவதால்
தெருக்கள் புழுதியால் நிரம்பின; மா மறுகலின் வழி மயக்குற்றன -
குதிரைகள் சாரி போவதால் வழிகள் உருத்தெரியாது மறைந்தன; கலம்
கழாஅலின் துறை கலக்குற்றன -  படைக்கலங்களைக்  கழுவுவதால்   
நீர்த்  துறைகள் குழம்பிவிட்டன; பிடி உயிர்ப்பன்ன கைகவர்  இரும்பின் -
பிடியானை உலைத்துருத்தியின் வாயிரும் புபோலும்; ஓவுறழ் இரும்புறம் -
இரட்டைக் கதவமைந்த சுருங்கை வழி; காவல் கண்ணி - காக்கப்படுவது 
கருதி; வம்ப வேந்தர் - புதியரான வேந்தர்கள்; பொறை மலிந்து நிலன்
நெளிய - சுமை மிகுவதால் நிலமும் சுளியும் படியாக; வந்தோர் பலர் -
வந்தவர் பலராவர்; கருங்கண் கொண்ட நெருங்கால் வெம்முலை - கரிய
கண்ணையுடைய நெரங்கிய விருப்பத்தையுண்டாக்கும் முலைகளையும்;