| மகட்கொடை வேண்டி நின்றனர். அவள் தந்தையோ அவர்களை மறுத்தான். அவர் தானை பண்ணிப் போர்க்குச் சமைந்தனர். அது கண் மதுரைப் படைமங்க மன்னியார், அப் போர் வினையால் ஊரெய்தும் கேடு நினைத்து வருந்தி இப் பாட்டைப் பாடியுள்ளார். | | படுமணி மருங்கின பணைத்தாள் யானையும் கொடுநுடங்கு மிசைய தேரு மாவும் படையமை மறவரொடு துவன்றிக் கல்லெனக் கடல்கண் டன்ன கண்ணகன் றானை | | 5. | வென்றெறி முரசின் வேந்த ரென்றும் | | | வண்கை யெயினன் வாகை யன்ன இவணலந் தாரா தமைகுவ ரல்லர் என்னா வதுகொறானே தெண்ணீர்ப் பொய்க் மேய்ந்த செவ்வரி நாரை | | 10. | தேங்கொண் மருதிண் பூஞ்சினை முனையிற் | | | காமரு காஞ்சித் துஞ்சும் ஏமஞ்சால் சிறப்பினிப் பணைநல் லூரே. |
திணையும் துறையு மவை: மதுரைப் படைமங்க மன்னியார் பாடியது.
உரை: படுமணி மருங்கின பணைத்தாள் யானையும் - ஒலிக்கின்ற மணி கட்டபட்ட பக்கத்தையுடைய பருத்த காலையுடைய யானைகளும்; கொடி நுடங்கும் மிசைய தேரும் மாவும் - கொடி நின்றசையும் உச்சியை யுடைய தேர்களும் குதிரைகளும்; படை அமை மறவரொடு துவன்றி - படைக்கலமேந்திப் போர்க்கமைந்த வீரருடனே நெருங்கி; கல்லெனக் கடல் கண்டன்ன - கல்லென்னும் முழக்கத்தோடே கூடிய கடலைக் கண்டாற் போன்ற; கண்ணகன் தானை - இடமகன்ற தானையையுடைய; வென்றெறி முரசின் வேந்தர் - வென்றெறிந்த முரசினையுடைய அரசர்; என்றும் - எப்போதும்; வண்கை எயினன் வாகை யன்ன - வள்ளன்மையுடையனாகிய எயினன் என்பானுக்குரிய வாகை யென்னும் நகரத்தைப் போன்ற; இவள் நலம் -இவள் பெண்மை நலத்தை; தாராது - தந்தையானவன் மணஞ்செய்து தாரா தொழியின்;அமைகுவ ரல்லா - வறிது அமைந்து மீளார்; தெண்ணீர்ப் பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை - தெளிந்த நீரையுடைய பொய்கையின் மீனன மேய்ந்த செவ்வரி நாரை - தெளிந்த நீரையுடைய பொய்கையின் மீனை மேய்ந்த செல்வரி நாரைகள்; தேங்கொள் மருதின் பூஞ்சினை முனையின் - தேன் பொருந்திய மருதமரத்தின் பூவொடு கூடிய கிளைகளில் தங்குதலை வெறுப்பின்;காமரு காஞ்சி துஞ்சும் - அழகிய காஞ்சிமரத்தின்கண் உறங்கும்; ஏமம் சால் சிறப்பின் இப்பணை நல்லூர் - காப்பமைந்த சிறப்பினையுடைய நல்செய் வயல் வளம் நிறைந்த இந்தவூர்; என்னாவது கொல் - என்னவாகுமோ, தெரிந்திலதே; எ - று. |