பக்கம் எண் :

304

     
5.ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
 குன்றேறிப் புனற்பாயிற்
புறவாயாற் புனல்வரையுந்து.............
.............நொடைநறவின்
மாவண் டித்தன் வெண்ணெல் வேலி
 10.உறந்தை யன்ன வுரைசா னன்கலம்
 கொடுப்பவுங் கொளாஅ னெடுந்தகை யிவளே
விரிசினைத் துணர்ந்த நாகிள வேங்கையிற்
கதிர்த்தொளி திகழு நுண்பல் சுணங்கின்
மாக்கண் மலர்ந்த மலைய டன்னையும்
 15.சிறுகொ லுளையும் புரவியொடு..........
 ................யாரே.

     திணையும் துறையு மவை. பரணர் பாடியது.

     உரை: தேஎங்கொண்ட வெண் மண்டையான் - கள் நிரம் பக்கொண்ட
வெள்ளிய மண்டையின்கண்; வீங்கு முலை ... கறக்குந்து - பருத்த மடியில்
...கறக்கும்; அவல் வகுத்த பசுங்குடையால் - பள்ளமுண்டாகச் செய்யப்பட்ட
பசிய ஓலைக் குடையில்; புதல் முல்லைப் பூப்பறிக்குந்து - புதவிடத்தே
மலர்ந்த முல்லைப்பூக்களைப் பறிக்கும்;ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
- ஆம்பலின் தண்டால செய்யப்பட்ட வளையணிந்த கையையுடைய மகளிர்;
குன்றேறிப் புனல் பாயின் - மணற்குன்றின் மேலேறி நீர் நிலையில்
விளையாடப் பாய்வாராயின்; புற வாயால் புனல்வரையுந்து - புறத்தே நீர்
செ்ல்லுதற்குரிய கோடியில் வழிந்து நீங்கும்; ......... நொடை நறவின் ............
விலைப் பொருட்டாகிய கள்ளினையுடைய; மாவண் தித்தன் - பெரிய
வண்மையையுடைய தித்தனது; வெண்ணெல் வேலி உறந்தை யன்ன -
வெண்ணெல் வயல்கள் வேலியாகச் சூழ்ந்துள்ள உறையூரைப்போல;உரைசால்
நன் கலங் கொடுப்பவும் - புகழ் நிறைந்த நன்கலங்கள் பவவற்றைக்
கொடுக்கவும்; நெடுந்தகை கொளா அன் நெடிய தகைமையினையுடைய தந்தை
அவற்றைக் கொள்ளானாயினான்; இவள் - இம் மகள் தானும்; விரி சினைத்
துணர்ந்த நாகிள வேங்கையின் - விரிந்த கிளையிடத்துக் கொத்துக்
கொத்தாகப் பூத்துள்ள இளைய வேங்கை மரத்தினைப்போல; கதிர்த்து ஒளி
திகழும் - கதிர்விட்டு ஒளி செய்யும்; நுண் பல் சுணங் கின் நுண்ணிய
பலவாகிய சுணங்கு பரந்த; மாக்கண் மலர்ந்த முலையள் - கரிய கண்
தோன்றிய முலையையுடையளாயினாள்; தன்னையும் - தமையனும்; சிறுகோல்
உளையும் புரவியொடு - சிறு கோலுக்கு வருந்தும் குதிரைகளுடன்;
.........யாரே........யாவர்; எ - று.