| பஞ்சியொடு விள்ஙகின்றனர். அவர் காண்பதற்கே அச்சம் தருபவராக இருப்பர், கண்” என்று இப் பாட்டாற் கூறியுள்ளார்.
| ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த பொருஞ்செய் பல்கா சணிந்த வல்குல் ஈகைக் கண்ணி யிலங்கத் தைஇத் தருமண லியல்வோள் சாய னோக்கித் | 5. | தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை | | வினவ லானா வெல்போ ரண்ணல் யார்மக ளென்போய் கூறக் கேளினிக் குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு நாட்கடா வழித்த நனந்தலைக் குப்பை | 10. | வல்வி லிளையர்க் கல்குபத மாற்றத் | | தொல் குடி மன்னன் மகளே முன்னாட் கூறி வந்த மாமுது வேந்தர்க்கு ........................... செருவா யுழக்கிக் குருதி யோட்டிக் | 15. | கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு | | பஞ்சியுங் களையாப் புண்ணர் அஞ்சுதக வுடையரிவ டன்னை மாரே. |
திணையும் துறையு மவை. காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியது.
உரை: ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த - குற்றமில்லாத பொற் கொல்லன் பழுதறச் செய்த; பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல் - பொன்னாலாகிய பல மணியணிந்த மேகலையும்; ஈகைக் கண்ணி இலங்கத்தைஇ - பொன்னாற் செய்த கண்ணியும் விளக்கமுற ஒப்பனை செய்துகொண்டு; தருமணல் இயல்வோள் சாயல் நோக்கி - புதிது கொணர்ந்து பரப்பப்பட்ட மணலின்கண் நடந்து செல்பவளுடைய சாயலை நோக்கி; தவிர்த்த தேரை - செல்லாது நிறுத்திய தேரையுடையனாய், விளர்த்த கண்ணை வெளுத்த பார்வையினையுடையனாய்; வினவலானான வெல்போர் அண்ணல் - கேட்டல் அமையாத வெல்லும் போரையுடைய தலைவ; யார் மகள் என்போய் - இவள் யார் மகள் என்று கேட்கின்றாய்; இனி கூறக் கேள் - இப்பொழுது யான் கூறக்கேட்பாயாக; குன்று கண்டன்ன நிலைப் பல் போர்பு - மலையைக் கண்டாற்போன்ற நிலையினையுடைய பல நெற்போர்களை; நாள் கடா அழித்த நனந்தலைக் குப்பை - நாட்காலையில் அழித்துக் கடாவிடப்பட்ட இடத்திற் குவிந்த நெல்லை; வல்வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றா - விலய வில் வீரர்களுக்கு நாளுணவாக நல்குவதில் மாறுதல் இல்லாத; தொல் குடி மன்னன் மகள் - |