பக்கம் எண் :

334

     

கண்களாகக்கொண்ட நிலமாகிய மகள், முன்னோராகிய வேந்தர் பலர்
மறையவும் யான் மறையாது உள்ளேனே என அழும் நிலையும் உண்டென
அறிந்தோர் கூறுவர் என்று நிலையாமைப் பண்பை இனிமையுறக்
கூறுகின்றார், மார்க்கண்டேயனாரைப்பற்றி குறிப் பொன்றும் கிடைத்திலது.
இவர் பெயர் மாக்கடையனாரென்றும் பாடவேறுபாடு காணப்படுகிறது.

 மயங்கிருங் கருவிய விசும்புமுக னாக
இயங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரிய
வளியிடைய வழங்கா வழக்கரு நீத்தம்
வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்துப்
 5. பொன்னந் திகிரி முன்சமத் துருட்டிப்
 பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்
முன்னோர் செல்லவும் செல்லா தின்னும்
விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற
உள்ளேன் வாழியர் யானெனப் பன்மாண்
 10.நிலமக ளழுத காஞ்சியும்
 உண்டென வுரைப்பரா லுணர்ந்திசி னோரே.

     திணை: காஞ்சி, துறை: பெருங்காஞ்சி. மார்க்கண்டேயனார் பாடியது.

     உரை: மயங்கு இருங் கருவிய விசும்பு முகனாக-தம்மிற் கலந்த மழை
மின் முதலியவற்றின் தொகுதியையுடைய விசும்பை முகமாகவும்; இயங்கிய
இருசுடர் கண்ணென - விசும்பின்கண் இயங்கும் ஞாயிறும் திங்களுமாகிய
சுடர் இரண்டையும் கண்களாகக்கொண்ட; பன்மாண் நிலமகள் - பலவ
கையாலும் மாண்புற்ற நிலமாகிய மகள்;  பெயரிய  வளியிடை   வழங்கா
வழக்கரு நீத்தம் - இடம் விட்டுப் பெயர்தலையுடைய காற்று இயங்காத
இடமாகிய எவ்வுயிரும் செல்லுதற்கரிய விசும்பைக் கடந்து; வயிரக் குறட்டின்
வயங்குமணியாரத்து - வயிரத்தாற் செய்யப்பட்ட குறட்டின்கண் செறிந்து
விளங்குகின்ற மணிகளாலாகிய ஆர்க்காலையுடைய; பொன்னந் திகிரி முன்
சமத்துருட்டி - பொன்னாற் செய்யப்பட்ட ஆழிப்படையைப் போரின் முன்னே
நின்று செலுத்தி; பொருநர்க் காணா பகைவரையழித்து - மேலே வரக்கடவ
பகைவர் வரப்பெறாமையால; செருமிகு முன்பின் - போர்க்கண் மேம்பட்ட
வலியினையுடைய; முன்னோர் செல்லவும் செல்லாது - முன்னுள்ளோராகிய
வேந்தர் விண்ணுலகு செல்லக் கண்டுவைத்தும் உடன் செல்லாது; விலை
நலப் பெண்டிரின் - தம் நலத்தைப் பிறர்க்கு விற்கும் மகளிர் போல; பலர்
மீக்கூற - பலர் என் நலத்தைப் பாராட்டிப் புகழ; யான் இன்னும் உள்ளேன்
வாழியர் - யான் இப்பொழுதும் நிலையாக இருக்கின்றேன், யான் வாழ்க; என
- என்று; அழுத காஞ்சியும்