| கெடலருந் திருவ வுண்மோ.......... விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப மடை வேண்டுநர்க் கடையருகா தவிழ்வேண்டுநர்க் கிடையாருளி | 20. | நீர்நிலை பெருத்த வார்மண லடைகரைக் | | காவு தோறிழைத்த வெறியயர் களத்தின் இடங்கெத் தொகுத்த விடையின் மடங்க லுண்மை மாயமோ வன்றே. |
திணையும் துறையு மவை. ............கோதமனார் பாடியது.
உரை: விழுக் கடிப்ப அறைந்த முழுக் குரல் முரசம் - பெரிய குறுந் தடியால் அடிக்கப்பட்ட பெரு முழக்கத்தையுடைய முரசம்; ஒழுக் குடை மருங்கின் - மறவொழுக்கமுடைய வீரரிடத்தே சென்று; ஒரு மொழித்தாக - அரசாணை யென்ற ஒரு குறிப்பே தோன்ற; அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப - பாம்மை எறியும் இடி முழங்குவதுபோல முழங்க; ஒருதாமாகிய பெருமையோரும் - பெருமையுடையோர்க்குக் தாம் எல்லையாகிய பெருமையுடை வேந்தரும்; மஙஹபகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனர் - தங்கள் புகழை நிறுவிவிட்டுத் தாம்மாண்டு மறைந்தனர்; அதனால்-; அறவோன் மகனே - அறத்ததையுடைய வேந்தனுக்கு மகனே மறவோர் செம்மால் - வீரர்கட்குத் தலைவனே; நின் ஊற்றம் பிறர் அறியாது - நின்னுடைய வலியைப் பிறர் அறியாமலும்; பிறர் கூறிய மொழி தெரியா - நீர் கூறுவனவற்றின் உள்ளுறு கருத்தை யறிந்துகொண்டும்; ஞாயிற்றெல்லை ஆள்வினைக் குதவி - ஞாயிறு விளங்கும் எல்லையாகிய பகற்போதில் வினைசெய்வோர் பலரோடும் இருந்து மறுநாள் செய்யக்கடவவற்றை யாராய்ந்தும்; உரைத்திசின் - வினைஞர்கட்கு உரைப்பாயாக; பெரும் - பெருமானே; நன்றும் - பெரிதும்; ............ உழவு ஒழி பெரும்பகடு அழிதின்றாங்கு ............ உழுதலைச் செய்து நீங்கிய பெரிய எருது வைக்கோலைத் தின்றாற்போல; செங்கண் மகளிரொடு சிறுதுனி அளைஇ - சிவந்த கண்ணையுடைய மகளிருடனே சிறிதாகியதுனி கலந்து; அங்கள்தேறல் ஆம்கலத்து உகுப்ப - அழகிய கள்ளினது தெளிவை ஆராய்ந்து கலத்திற் பெய்து தர; கெடல் அருந்திருவ - கெடுவதில்லாத செல்வத்தையுடையவனே; விடைவீழ்த்துச் சூடு கிழிப்ப - ஆட்டுக்கிடாயையறுத்துச் சூட்டுக் கோலிற் கோத்துச் சுட்ட சூட்டிறைச்சியைச் சமைத்து; மடைவேண்டுநர்க்கு அடையருகாது - |