| மண்டம ரட்ட மதனுடை நோன்றாள் வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே பொங்குநீ ருடுத்தவிம் மலர்தலை யுலகத்து நின்றலை வந்த விருவரை நினைப்பிற் |
5 | றொன்றுறை துப்பினின் பகைஞரு மல்லர் |
| தமர்வெங் காட்சியொடு மாறெதிர் பெழுந்தவம் நினையுங் காலை நீயு மற்றவர்க் கனையை யல்லை யடுமான் றோன்றல் பரந்துபடு நல்லிசை யெய்தி மற்றுநீ |
10 | உயர்ந்தோ ருலக மெய்திப் பின்னும் |
| ஒழித்த தாய மவர்க்குரித் தன்றே அதனால், அன்ன தாதலு மறிவோய் நன்றும் இன்னுங் கேண்மதி யிசைவெய் யோயே நின்ற துப்பொடு நிற்குறித் தெழுந்த |
15 | எண்ணில் காட்சி யிளையோர் தோற்பின் |
| நின்பெருஞ் செல்வம் யார்க்கெஞ் சுவையே அமர்வெஞ் செல்வ நீயவர்க் குலையின் இகழுந ருவப்பப் பழியெஞ் சுவையே அதனால், ஒழிகதி லத்தைநின் மறனே வல்விரைந் |
20 | தெழுமதி வாழ்கநின் னுள்ள மழிந்தோர்க் |
| கேம மமாகுநின் றாணிழன் மயங்காது செய்தல் வேண்டுமா னன்றே வானோர் அரும்பெற லுலகத் தான்றவர் விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளந்கே. |