பக்கம் எண் :

340

     
 நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினுந் தம்மொடு செல்லா
வேற்றோ ராயினு நோற்றோர்க் கொழியும்
ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறையப்
 5.பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து
 பாசிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
நாரரி தேறன் மாந்தி மகிழ்சிறந்
திரவலர்க் கருங்கல மருகாது வீசி
வாழ்தல் வேண்டுமிவண் வரைந்த வைகல்
 10.வாழச் செய்த நல்வினை யல்ல
 தாழுங் காலைப் புணைபிறி தில்லை
ஒன்றுபுரிந் தடங்கிய விருபிறர் பாளர்
முத்தீப் புரையக் காண்டக விருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்
 15. யானறி யளவையோ விதுவே வானத்து
 வயங்கித் தோன்று மீனினு மிம்மென
இயங்கு மாமழை யுறையினும்
உயர்ந்துமேந் தோன்றிப் பொலிகநுந் நாளே.

     திணை: பாடாண்டிணை. துறை; வாழ்த்தியல். சேரமான் மாவண்
கோவும் பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதியும், சோழன்
இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரை ஒளவையார்
பாடியது.


     உரை: நாகத் தன்ன பாகார் மண்டிலம் - நாகலோகத்தைப்
போன்ற வளவிய பகுதிகளையுடைய நிலவட்டம்; தமலே யாயினும் -
தம்முடையவேயென வுரிமை கொள்ளப்பட்டனவாயினும்; தம்மொடு செல்லா
- வேந்தர் தாம் இறக்குங்கால் அவரோடே மறைந்தொழியாமல் நின்று;
வேற்றோராயினும் நோற்றோர்க்கு ஒழியும் - அவர்க்குப் பின்வரும்
வேந்தர் ஒரு தொடர்பு மில்லாத வேற்று நாட்டவராக இருப்பினும்;
நோன்மையுடையராயின் அவர்க்குரிய தாய்விடும்; ஏற்றபார்ப்பார்க்கு
ஈர்ங்கை நிறைய - பொருள் வேண்டி இரந்துநின்ற பார்ப்பனருக்கு
அவருடைய நனைந்த கை நிறையும்படி; பூவும் பொன்னும் புனல்படச்
சொரிந்து - பொற்பூவும் பொற்காசும் நீர் வார்த்துக் கொடுத்து; பாசிழை
மகளிர் பொலங்கலத்து ஏந்திய நார் அரிதேறல் மாந்தி மகிழ்சிறந்து -
பசிய இழை யணிந்த மகளிர் பொன்வள்ளங்களில் எடுத்துக் கொடுத்த
நாரால் வடிக்கப்பட்ட கட்டெளிவை யுண்டு களித்து; இரவலர்க்கு
அருங்கலம் அருகாது வீசி -