|   |             கொங்குபுறம் பெற்ற கொற்ற வேந்தே             .....................தண்டா மாப்பொறி | 
|  10. | மடக்கண்             மயிலியன்று மறலி யாங்கு | 
|   | நெடுஞ்சுவர்             நல்லில் புலம்பக் கடைகழிந்து             மென்றோண் மகளிர் மன்றம் பேணார்             புண்ணுவந்து....................             .....................உளையணிப் புரவி வாழ்கெனச் | 
|  15. | சொன்னிழ             லின்மையி னின்னிழற் சேர | 
|   | நுண்பூண்             மார்பிற் புன்றலைச் சிறாஅர்             அம்பழி பொழுதிற் றமர்முகங் காணா             ...வாளிற் றாக்கான்             வேந்துபுறங் கொடுத்த வீய்ந்துகு பறந்தலை | 
|  20. | மாட             மயங்கெரி மண்டிக் கோடிறு | 
|   | புருமெறி             மலையி னிருநிலஞ் சேரச்             சென்றோன் மன்ற கொலைவற் சென்றெறி             வெம்புண் ணறிநர் கண்டுகண் ணலைப்ப             வஞ்சி முற்றம் வயக்கள னாக | 
|  25. | அஞ்சா             மறவ ராட்போர் பழித்துக் | 
|   | கொண்டனை             பெரும குடபுலத் ததரி             பொலிக வத்தைநின் பணைதயங்கு வியன்களம்              விளங்குதிணை வேந்தர் களந்தொறுஞ் சென்று              புகர்முக முகவை பொலிகென் றேத்திக் | 
|  30. | கொண்டன             ரென்ப பெரியோர் யானும் | 
|   | அங்கண்             மாக்கிணை யதிர வொற்ற             முற்றிலே னாயினுங் காதலி னேத்தி             நின்னோ ரன்னோர் பிறரிவ ணின்மையின்             மன்னெயின் முகவைக்கு வந்திசிற் பெரும | 
|  35. | பகைவர்             புகழ்ந்த வாண்மை நகைவர்க்குத் | 
|   | தாவின்             றுதவும் பண்பிற் பேயொடு              கணநரி திரிதரு மாங்க ணிணனரந்து             செஞ்செவி யெருவை குழீஇ             அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே. |