| கொங்குபுறம் பெற்ற கொற்ற வேந்தே .....................தண்டா மாப்பொறி |
10. | மடக்கண் மயிலியன்று மறலி யாங்கு |
| நெடுஞ்சுவர் நல்லில் புலம்பக் கடைகழிந்து மென்றோண் மகளிர் மன்றம் பேணார் புண்ணுவந்து.................... .....................உளையணிப் புரவி வாழ்கெனச் |
15. | சொன்னிழ லின்மையி னின்னிழற் சேர |
| நுண்பூண் மார்பிற் புன்றலைச் சிறாஅர் அம்பழி பொழுதிற் றமர்முகங் காணா ...வாளிற் றாக்கான் வேந்துபுறங் கொடுத்த வீய்ந்துகு பறந்தலை |
20. | மாட மயங்கெரி மண்டிக் கோடிறு |
| புருமெறி மலையி னிருநிலஞ் சேரச் சென்றோன் மன்ற கொலைவற் சென்றெறி வெம்புண் ணறிநர் கண்டுகண் ணலைப்ப வஞ்சி முற்றம் வயக்கள னாக |
25. | அஞ்சா மறவ ராட்போர் பழித்துக் |
| கொண்டனை பெரும குடபுலத் ததரி பொலிக வத்தைநின் பணைதயங்கு வியன்களம் விளங்குதிணை வேந்தர் களந்தொறுஞ் சென்று புகர்முக முகவை பொலிகென் றேத்திக் |
30. | கொண்டன ரென்ப பெரியோர் யானும் |
| அங்கண் மாக்கிணை யதிர வொற்ற முற்றிலே னாயினுங் காதலி னேத்தி நின்னோ ரன்னோர் பிறரிவ ணின்மையின் மன்னெயின் முகவைக்கு வந்திசிற் பெரும |
35. | பகைவர் புகழ்ந்த வாண்மை நகைவர்க்குத் |
| தாவின் றுதவும் பண்பிற் பேயொடு கணநரி திரிதரு மாங்க ணிணனரந்து செஞ்செவி யெருவை குழீஇ அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே. |