உரை:         உருமிசை முரசம் முழக்கென சைப்ப - இடியினது ஓசையைத்          தன்பாலுடைய முரசு மழையிடத்து முழக்கம் போல முழங்க; செருநவில்          வேழம் கொண்மூவாக - போரிற் பயின்ற யானைகள் முகில்களாகவும்;          தேர்மா அழிதுளி தலைஇ - தேர்களும் குதிரைகளும்சிதைந்து பரந்து          மழைத்துளியாகவீழ்ந்து கெட; நாம் உறக் கணைக்காற் றெடுத்த கண்ணகன்          பாசறை - அச்சமுண்டாக அம்புகளாகிய காற்று வீசுகின்ற இடமகன்ற பாசறையும்; இழிதரு குருதியொடு ஏந்திய         ஒள்வாள் - சொரிகின்ற          குருதியோடே கையிலேந்திய வாட்படையால்; பிழிவ துபோல - உடலைப்          பிழிந்தெடுத்தற்குப்  பிளந்தாற்   போல்;   பிட்டை           ஊறுஉவப்ப -          பிளத்தலாலுண்டாகிய புண்ணுற்று மகிழ்ச்சி யெய்த; மைந்தர் ஆடிய மயங்கு         பெருந்தானை வலியுடைய வீரர் போர்செய்தற்காக விரும்பிச் சேர்ந்திருக்கின்ற         பெரிய தானையால்; கொங்கு புறம் பெற்ற கொற்றவேந்தே - கொங்கு          நாட்டவரைப்      புறந்தந்    தோடச்செய்த             வெற்றியையுடைய          வேந்தனே;.....................தண்டா மாப்பொறி - குறையாத பெரிய பொறிகளையும்;         மடக் கண் மயில் - மடவிய கண்களையுமுடைய மறிப்பெடை; இயன்று மற          லியாங்கு - மாறுகொண்டு முன்னும் பின்னும் பன்முறை நடந்ததுபோல;          நெடுஞ் சுவர் நல்லில் புலம்ப - நெடிய சுவர்க ளையுடிய நல்ல தம்          இல்லங்கள் தனிமைப்பட; கடைகழிந்து - அவற்றினின்றும் அகன்று சென்று;          மென்றோள் மகளிர் - மெல்லிய தோளையுடைய மகளிர்; மன்றம் பேணார் -          மன்றத்தை நாடிச் செல்லாது; புண் உவந்து - தம் கணவன் போரிற் பெரிதும்          விழுப்புண்ணைக் காணவிரும்பி;.....................உளையணிப் புரவி வாழ்கென -          தலையாட்டமாகிய அணியணிந்த குதிரை வாழ்வதாக என்று வாழ்த்தி; சொல்          நிழலின்மையின் புகழமைந்த புகலிடம் பிறி தில்லாமையால்; நின்னிழல் சேர          நின்னுடைய சிறந்த தாணிழலாகிய புகலைச் சேர்வாராக; நுண்பூண் மார்பின்          புன் றலைச் சிறாஅர் - நுண்ணிய பூணணிந்த மார்பினையும் புல்லிய          தலையினையு முடைய சிறுவர்கள்; அம்பு அழிபொழுதில் தாம் தொடுத்து          விளையாடி அம்பு இல்லையாகும்போது; தமர் மு கம் காணார் - தமக்கு          அவற்றைச் செய்து தரும் தந்தை தன்னையரைக்காணாராய்;.....................வாளில்         தக்கான் - வாளால் எறியானாய்; வேந்து புறங் கொடுத்த வீய்ந்துகு பறந்          தலை - வேந்தர்கள் புறந்தந் தோடியதனால் அழிந்து கெட்ட பே         ார்க்களத்தில்; மாடமயங்கெரி மண்டி - பெருமாடங்களைப் பற்றி யெரிக்கும்          தீப்போல நெருங்கி; உரும் எறிமலையின் - இடியேற்றால் தாக்குண்டு வீழும்          மலைபோல; கோடிறுபு நிலஞ் சேர - கோடொடிந்து நிலத்தே வீழுமாறு          கொன்று; சென்றோன் மன்ற - வெற்றியொடு சென்றான் தெளிவாக;  |