பக்கம் எண் :

377

     
 கவர்பரிக்கச்சை நன்மாவினர்
 25.வடிமணி வாங்குருள
 கொடி மிசைநற் றேர்க்குழுவினர்
கதழிசை வன்கணினர்
வாளின் வாழ்ந ரார்வமொ டீண்டிக்
கடலொலி கொண்ட தானை
 30.அடல்வெங் குரிசின் மன்னிய நெடிதே.

      திணை: அது; துறை: வாழ்த்தியல்: சோழன் இராயசூயம் வேட்ட
பெருநற்கிள்ளியை உலோச்சனார் பாடியது.


     உரை: பனி பழுனியபல் யாமத்து - பனி மிக்க பல யாமங்கள்
உறங்கியதனால்; பாறு தலைமயிர் நனைய - பரந்து சிதறித் தோன்றும்
தலைமயிர் பனியால் நனைந்துபடிய; இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின் -
தான் இனிதுறங்கும் செல்வ மனையின்கண்; இனையல் அகற்ற - யான் எனது
வறுமை வருத்தம் நீக்கக்கருதி; என் கிணை தொடாஅக் குறுகி - என்
தடாரிப் பறையை இசைத்துக் கொண்டு சென்று; அவியுணவினோர் புறங்காப்ப
அவியாகிய உணவை யுண்ணும் தேவர்கள் புறத்தே நின்று பாதுகாக்க;
அறநெஞ்சத்தோன் நாள் வாழ என்று - அறஞ் செய்யும் நெஞ்சினையுடைய
வேந்தன் பன்னாள் வாழ்வானாக என்று வாழ்த்த; அதற் கொண்டு வரல் ஏத்தி
- அது கொண்டு வாழ்த்தி வந் தவர்களை அவன் வரவேற்க; கரவு இல்லாக்
கவி வண்கையான் - இரவலர்க்கு மறைத்தல் இல்லாமல் இடக் கவிந்த
வளவிய கையையுடையராதலால்; வாழ்க எனப்பெற்றோர் - நெடிது வாழ்க
எனப் புலவர் வாழ்த்தும் வாழ்த்தாகிய பொருளைப் பெற்றோராகிய; பிறர்க்கு
- ஏனை வேந்தர்கட்கு; தான் உவமம் அல்லது - இவ்வேந்தன் உவம
மாவனே யன்றி; தனக்கு - இவ்வேந்தனுக்கு; பிறர் உவமம் இல்லென -
ஏனைவேந்தர் உவமமாகும் ஒப்பும் உயர்பும் இலர் என்று சொல்லி வந்த
சான்றோர் பலரும் பாராட்ட; அது நினைந்து மதி மழுகி - அப் பாராட்டைக்
கேட்டு அறிவான் ஆராய்ந்த யான் அவனது பெருமை என் அறிவெல்லை
யிறந்து விளங்குவதை நினைந்து மதிமயங்கி; ஆங்கு நின்ற என் காணூஉ -
அவ்விடத்தே நின் றொழிந்த என்னைக்கண்டு; சேய்நாட்டுச் செல்
கிணைஞனை - புரவலரை நாடிச் சேய்மையிலுள்ள நாடுகட்குச் செல்லும்
கிணைப்பொருநனே; நீ எமக்குப் புரவலை என்ன - நீ மலையிடைப்
பெறப்பட்ட மணிகளையும்; கடறுபயந்த பொன்னும் - காட்டிற் பெறப்பட்ட
பொன்னையும்; கடல் பயந்த கதிர் முத்தமும் - கடலித்தே