பக்கம் எண் :

382

     

அரண்மனைக் கண்ணுள்ள; புதுப்பிறை அன்ன சுதைசெய் மாடத்து - புதிது
முளைத்த பிறைபோன்ற வெள்ளிய சுதையால் இயன்ற மாடத்தையுடைய;
பனிக்கயத்தன்ன நீணகர் நின்று - குளிர்ந்த நீர்நிலை போல் குளிர்ச்சி
பொருந்திய நெடிய பெருமனையின் முன்னே நின்று; என் அரிக்கூடு
மாக்கிணை இரிய ஒற்றி - எனது அரித்த ஓசையைச் செய்யும் பெரிய
தடாரிப்பறை  கண்  கிழியுமாறு  கொட்டி;  எஞ்சா  மரபின் வஞ்சிபாட -
வலிகுன்றாத முறைமையினையுடைய  பகைமேற்  செல்லும்  செலவாகிய
வஞ்சித்துறைப் பாட்டுக்களை இசைத்துப் பாட; எமக்கென வகுத்தவல்ல -
எம்மைப் போலும் பரிசிலர்க் களித்தற்கெனச் செய்யப்படாதனவான; மிகப்பல
- மிகப்பலவாகிய; மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை - மேன்மையான
சிறப்பினையுடைய பெறற்கரிய அணிகலங்களும் பிற பொருள்களுமாகிய
செல்வத்தை; தாங்காது பொழிதந்தோன் - எம்மால் தாங்கமாட்டாத அளவில்
வழங்கினான்; இலம்பாடு உழந்த என்  இரும்பேர்  ஒக்கல் -  வறுமைால்
வருந்திய என் கூற்றத்தார்; அதுகண்டு - அக் கொடைப் பொருளைக் கண்டு
பேரார்வத்தோடு  தத்தம்  கைக்கொண்டு;  விரல்செறிமர  பின - செவித்
தொடக்குநரும் விரல்களில் அணியத் தகுவனவற்றைக் காதில் அணிபவரும்;
செவித்தொடர்   மரபின  விரல்செறிக்குநரும் -  செவியல்   அணியத்
தகுவனவற்றை விலலில் அணிபவரும்;  அரைக்கமை  மரபின  மிடற்று
யாக்குநரும் - அரைக்கு அமைந்தவற்றைக் கழுத்தில் அணிபவரும்;
மிடற்றமை மரபின அரைக்கு யாக்குநரும் -கழுத்தில் அணிவனவற்றை
இடையிற் கட்டிக்கொள்பவருமாய்; கடுந்தெறல் இராமன் உடன்புணர்
சீதையை - கடிய வலித்தகை அரக்ன் வௌவிய ஞான்றை - மிக்க
வலியுடைய அரக்கனாகிய இராவணன் கவர்ந்து சென்றபோது; நிலஞ்சேர்
மதர் அணி கண்ட குரங்கின் - சீதை கழற்றியெறிய நிலத்தே வீழ்ந்த அழகிய
அணிகலன்களைக் கண்டெடுத்த குரங்கினுடைய; செம்முகப் பெருங்கிளை
இழைப்பொ லிந்தாங்கு - சிவந்த முகத்தையுடைய மந்திகளாகிய பெரிய சுற்றம்
அவ்  விழைகளைத்  தாம்  அணிந்து  விளங்கக்  கண்டோர்  சிரித்து
மகிழ்ந்தாற்போல; இருங்கிளைத் தலைமை யெய்தி - பெரிய சுற்றத்துக்குத்
தலைமை தாங்கி;  அரும்படர்   எவ்வம்   உழந்ததன்   தலை -   அவர்
வறுமைகளைதற் பொருட்டுப் பல அரிய நினைவுகளாலுண்டாகும் துன்பத்தால்
வருந்தியது போக; அறாஅ அருநகை - இனிதுபெற்றிகும் நீங்காத அரிய
மகிழ்ச்சியை மிகவும் அடைந்தோம்; எ - று.


     தென்பரதவர், தென்பாண்டிநாட்டின் கடற்கரையிலிருந்து குறும்பு
செய்தவர். இவர்கள் சில காலங்களில் பாண்டியர்க்குப் பகைவராகவும், சில
காலங்களில் துணைவராகவும் இருந்துள்ளனர். வடுகர் தொண்டைநாட்டுத்