பக்கம் எண் :

388

     

அஃது இன்னாரைக் குறிக்கிறதென்றறிய இயலவில்லை. டாக்டர். திரு.உ. வே.
சாமி நாதையர் வல்வேற்கந்தனென்று பாடங்கொண்டு “கந்தனென்பது
நாஞ்சில்மலைத் தலைவர் பரம்பரையிலுள்ளானும் இப்பாட்டுடைத்
தலைவனுமாகிய ஒருவன் பெயர்” என்று கூறியுள்ளார். இந் நூலாராய்ச்சிக்கு
கிடைத்த ஏட்டில் “வல்வேற் சாத்த னல்லிசை” யென்று காணப்படுகிறது.

 தென்பவ் வத்து முத்துப் பூண்டு
வடகுன் றத்துச் சாந்த முரீஇ
................ங்கடற் றாணை
இன்னிசையை விறல்வென்றித்
 5.தென்னவர் வயமறவன்
 மிசைப்பெய்தநீர் கடற்பரந்து முத்தாகுந்து
நாறிதழ்க் குளவியொடு கூதளங் குழைய
வேறுபெ...................த்துந்து
தீஞ்சுளைப் பலவி னாஞ்சிற் பொருநன்
 10.துப்பெதிர்ந் தோர்க்கே யுள்ளாச் சேய்மையன்
 நட்பெதிர்ந் தோர்க்கே யங்கை நண்மையன்
வல்வேற் சாத்த னல்லிசை...................
...................சிலைத்தார்ப் பிள்ளையஞ் சிறாஅர்
அன்ன னாகன் மாறே யிந்நிலம்
 15. இலம்படு காலை யாயினும்
 புலம்பல் போயின்று பூத்தவென் கடும்பே.

     திணை: அது. துறை: இயன்மொழி. நாஞ்சில் வள்ளுவனைக் கருவூர்க்
கதப்பிள்ளை பாடியது.


     உரை: தென்பவ்வத்து முத்துப்பூண்டு - தெண்கடலிற் குளித்தெடுத்த
முத்துமாலை சூடி; வடகுன்றத்துச் சாந்தம் உரீஇ - வட்மலையிற் பெற்ற
சந்தனத்தை யணிந்து;................... கடல்தானை - கடல் போன்ற தானையையும்;
இன்னிசைய விறல் வென்றி - இனிய புகழையுடைய போர் வென்றியையு
முடைய; தென்னவர் வயமறவன் - பாண்டியருடைய வலிமிக்க தானைத்
தலைவனும்; மிசைப் பெய்த நீர் மேலே - விசும்பிலிருந்து மழை பொழிந்த
நீர்;  கடல்  பரந்து  முத்தா  குந்து -  கடற்குட்  சென்று  முத்தாகும்;
நாறிதழ்க்குளவியொடு   கூதளங்   குழைய -  நறுமணம்   கமழும்
மலைமல்லிகையோடு கூதாளி தழைத்து விளங்க; வேறு பெ...துந்து-;
தீஞ்சுளைப்பலவின் நாஞ்சிற்பொருநன் - தீவியசுளைகளையுடைய பலா
மரங்கள் நிறைந்த நாஞ்சில்மாலையையுடைய வனுமாகிய தலைவன்; துப்பு
எதிர்ந்தோர்க்கு உள்ளாச் சேய்மையன் - வலிகொண்டு போர் செய்ய வரும்