அஃது இன்னாரைக் குறிக்கிறதென்றறிய இயலவில்லை. டாக்டர். திரு.உ. வே. சாமி நாதையர் வல்வேற்கந்தனென்று பாடங்கொண்டு கந்தனென்பது நாஞ்சில்மலைத் தலைவர் பரம்பரையிலுள்ளானும் இப்பாட்டுடைத் தலைவனுமாகிய ஒருவன் பெயர் என்று கூறியுள்ளார். இந் நூலாராய்ச்சிக்கு கிடைத்த ஏட்டில் வல்வேற் சாத்த னல்லிசை யென்று காணப்படுகிறது. | தென்பவ் வத்து முத்துப் பூண்டு வடகுன் றத்துச் சாந்த முரீஇ ................ங்கடற் றாணை இன்னிசையை விறல்வென்றித் | 5. | தென்னவர் வயமறவன் | | மிசைப்பெய்தநீர் கடற்பரந்து முத்தாகுந்து நாறிதழ்க் குளவியொடு கூதளங் குழைய வேறுபெ...................த்துந்து தீஞ்சுளைப் பலவி னாஞ்சிற் பொருநன் | 10. | துப்பெதிர்ந் தோர்க்கே யுள்ளாச் சேய்மையன் | | நட்பெதிர்ந் தோர்க்கே யங்கை நண்மையன் வல்வேற் சாத்த னல்லிசை................... ...................சிலைத்தார்ப் பிள்ளையஞ் சிறாஅர் அன்ன னாகன் மாறே யிந்நிலம் | 15. | இலம்படு காலை யாயினும் | | புலம்பல் போயின்று பூத்தவென் கடும்பே. |
திணை: அது. துறை: இயன்மொழி. நாஞ்சில் வள்ளுவனைக் கருவூர்க் கதப்பிள்ளை பாடியது.
உரை: தென்பவ்வத்து முத்துப்பூண்டு - தெண்கடலிற் குளித்தெடுத்த முத்துமாலை சூடி; வடகுன்றத்துச் சாந்தம் உரீஇ - வட்மலையிற் பெற்ற சந்தனத்தை யணிந்து;................... கடல்தானை - கடல் போன்ற தானையையும்; இன்னிசைய விறல் வென்றி - இனிய புகழையுடைய போர் வென்றியையு முடைய; தென்னவர் வயமறவன் - பாண்டியருடைய வலிமிக்க தானைத் தலைவனும்; மிசைப் பெய்த நீர் மேலே - விசும்பிலிருந்து மழை பொழிந்த நீர்; கடல் பரந்து முத்தா குந்து - கடற்குட் சென்று முத்தாகும்; நாறிதழ்க்குளவியொடு கூதளங் குழைய - நறுமணம் கமழும் மலைமல்லிகையோடு கூதாளி தழைத்து விளங்க; வேறு பெ...துந்து-; தீஞ்சுளைப்பலவின் நாஞ்சிற்பொருநன் - தீவியசுளைகளையுடைய பலா மரங்கள் நிறைந்த நாஞ்சில்மாலையையுடைய வனுமாகிய தலைவன்; துப்பு எதிர்ந்தோர்க்கு உள்ளாச் சேய்மையன் - வலிகொண்டு போர் செய்ய வரும் |