| ஊனு மூணு முனையி னினிதெனப் பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும் அளவுபு கலந்து மெல்லிது பருகி விருந்துறுந் தாற்றி யிருந்தனெ மாகச் |
5. | சென்மோ பெருமவெம் விழவுடை நாட்டென |
| யாந்தன் னறிந மாகத் தான்பெரி தன்புடை மையி னெம்பிரி வஞ்சித் துணரியது கொளாஅ வாகிப் பழமூழ்த்துப் பயம்பகர வறியா மயங்கரின் முதுபாழ்ப் |
10. | பெயல்பெய் தன்ன செல்வத் தாங்கண் |
| ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச் சிதாஅர் வள்பிற் சிதர்ப்புறத் தடாரி ஊன்சுகிர் வலந்த தெண்க ணொற்றி விரல்விசை தவிர்க்கும் மரலையில் பாணியின் |
15. | இலம்பா டகற்றல் யாவது புலம்பொடு |
| தெருமர லுயக்கமுந் தீர்க்குவெ மதனால் இருநிலங் கூலம் பாறக் கோடை வருமழை முழக்கிசைக் கோடிய பின்றைச் சேயை யாயினும் மிவணை யாயினும் |
20. | இதற்கொண்டறிநை வாழியோ கிணைவ |
| சிறுநனி, ஒருவழிப் படர்கென் றோனே யெந்தை ஒலிவெள் ளருவி வேங்கட நாடன் உறுவருஞ் சிறுவரு மூழ்மா றுய்க்கும் அறத்துறை யம்பியின் மான மறப்பின் |
25. | றிருங்கோ ளீராப் பூட்கைக் |
| கரும்ப னூரன் காதன் மகனே. |