| | பரந்தோ னெந்தை யாமெவன் றொமைலவதை அன்னோனையுடையே மென்ப வினிவறட் | 20 | கியாண்டு நிற்க வெள்ளி மாண்டக | | உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும் தின்ற நண்ப லூஉன் றோண்டவும் வந்த வைக லல்லது சென்ற வெல்லைச் செலவறி யேனே. |
திணையுந் துறையு மவை. கரும்பனூர் கிழானைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
உரை: மென்பாலான் - மென்புலமான மருதவயற்கண்; உடன் அணைஇ - தன் இனத்துடனே மேய்ந்துண்டு; வஞ்கிக் கோட்டு உறங்கும் நாரை - வஞ்சிமரத்தின் கிளையின்கண் தங்கியுறங்குதலைச் செய்யும் நாரை; அறைக்கரும்பின் பூ அருந்தும் - முற்றிய கரும்பினுடைய பூவைக் கொழுதும்; வன்பாலான் - வன்புலமாகிய முல்லை நிலத்தின்கண் விளையும்; கருங்கால் வரகின் அரிகால் கருப்பை அலைக்கும் பூழின்- கரிய தாளையுடைய வரகின் அரிகாலின்கண் வாழும் எலியைப் பிடிப்பதற்கு முயலும் குறும்பூழ்ப் பறவையின் ஆரவாரத்தால், அங்கண் குறுமுயல் வெருவ - அவ்விடத்தே யுறையும் குறுமுயல் அஞ்சி யோட; அயல - அயலிடத்தே நிற்கும்; கருங்கோட்டு இருப்பைப்பூ உறைக்குந்து - கரிய கிளைகளையுடைய இருப்பை மரத்தின் பூக்கள் உதிரும்; விழவின்றாயினும் - விழாவென்றும் நிகழா வழியும்; உழவர்மண்டை - உழவருடைய வுண்கலத்தில்; இருங்கெடிற்று மிசையொடு - பெரிய கெடிற்று மீனாகிய உணவுடனே; பூக்கள் வைகுந்து இஞ்சி முதலிய பூ விரவிய கள் நிறைந்திருக்கும்; கரும்பனூரன் கிணையேம் - கரும்பனூர் கிழானுடைய கிணைவ ராவோம்; பெரும - பெருமானே; நெல்லென்னாம் பொன் னென்னாம் - நெல்லும் பொன்னும் என்னவாகும்; கனற்றக் கொண்ட நறவு என்னாம் - உடல் வெதும்புமாறு கொண்ட கள்ளுந்தான் என்ன பயனுடைத்தாம்;............ மனைமன்னா அவை பலவும் - மனையிடத்து இல்லாத அவை பலவற்றையும்;யான் தண்டவும் - யான் குறைபடவும்;தான் தண்டான் - தான் சிறிதும் குறைவிலனாய்; நிணம் பெருத்த கொழுஞ்சோற்றிடை - நிணம் கலந்த கொழுவிய பெய்து; மண் நாணப் புகழ் வேட்டு - மண்ணவர் கண்டு நாணும்படியாகப் புகழைச் செய்து; புரந்தோன் - எம்மை விரைந்தேற்று ஆதரிப்பன்; எந்தை - எங்கள் தலைவன்; யாம் தொலைவதை எவன் - யாங்கள் வறுமை குறித்து |