| | திருந்துதொழிற் பலபகடு பகைப்புல மன்னர் பணிதியை தந்துநின் நகைப்புல வாணர் நல்குர வகற்றி மிகப்பொலியர்தன் சேவடியத்தையென் |
| 15 | றியாஅ னிசைப்பி னனிநன்றெனாப் |
| | பலபிற வாழ்த்த விருந்தோர்தங் கோன்,,, மருவவின்னக ரகன் கடைத்தலைத் திருந்துகழற் சேவடி குறுகல் வேண்டி வென்றிரங்கும் விறன் முரசினோன் |
| 20 | என்சிறுமையி னிழித்து நோக்கான் |
| | தன்பெருமையின் றகவுநோக்கிக் குன்றுறழ்ந்த களிறென்கோ கொய்யுளைய மாவென்கோ மன்றுநிறையு நிரையென்கோ |
| 25 | மனைக்களமரொடு களமென்கோ |
| | ஆங்கவை. கனவென மருள வல்லே நனவின் நல்கி யோனே நசைச றோன்றல் ஊழி வாழி பூழியர் பெருமகன் பிணர்மருப் பியானைச் செருமிகு நோன்றாட் |
| 30 | செல்வக் கடுங்கோ வாழி யாதன் |
| | என்னாத் தெவ்வ ருயர்குடை பணித்திவண் விடுவர் மாதோ நெடிதே நில்லாப் புல்லிலே வஞ்சிப் புறமதி லலைக்கும் கல்லென் பொருநை மணலினு மாங்கட் |
| 35 | பல்லுார் சுற்றிய கழனி |
| | எல்லாம் விளையு நெல்லினும் பலவே. |