பக்கம் எண் :

414

     

படிந்த  நறிய கபோலத்தையுடைய; பூம்பொறிப் பணையெருத்தின் - பூவேலை
செய்யப்பட்ட   பட்டமணிந்த   பருத்த   கழுத்தை  யுடையவாய்; வேறுவேறு
பரந்தியங்கி - வேறுவேறாகப் பரந்து சென்று; வேந்துடை மிளை அயல்
பரக்கும் - வேந்தர்களுடைய  காவற்காட்டின்  அயவிடத்தே பரவியுலவும்;
ஏந்துகோட்டு இரும்பிணர்த்தடக்கை - உயர்ந்த கோடுகளையும் பெரிய
சருக்சரை பொருந்திய பெரிய  கையையுமுடையவாய்;  திருந்துதொழில் பல
பகடு - திருந்திய தொழில் செய்யவல்ல பலவாகிய யானைகளையுடைய;
பகைப்புல மன்னர் பணிதிறை தந்து -  பகைநாட்டு   வேந்தர்  பணிந்து
தரற்குரிய   திறையைத்  தந்து;  நின் நகைப்புலவாணர் நல்குர வகற்றி -
நினக்கு இன்பச்சுவை நல்கும் அறிவினராகிய இரவலர்  நண்பர் முதலியோரது
வறுமையைப்  போக்கி; மிகப் பொலியார் தன் சேவடி - மிகவும் விளங்குக
அவன் திருவடி; என்று-; யா அன் இசைப்பின் நனி நன்று எனா - யான்
பாடுவேனாயின்  மிகவும்  நன்றென்று;  பல பிற வாழ்த்த இருந்தோர்-
பலவாகிய   பிற   இயல்புகளைக்  சொல்லி  வாழ்த்தக்  கேட்டு
மகிழ்ந்திருந்தோர்க்கு;  கோன் - தலைமை தாங்கும் வேந்தன், மருவ இன்நகர்
அகன்    கடைத்தலை - நெருங்குதற்கினிய    பெருமனையின்     அகன்ற
முற்றத்திடத்து; திருந்துகழற் சேவடி குறுகல் வேண்டி - திருந்திய கழலணிந்த
சேவடியை வந்தடையுமாறு; வென்றிரங்கும் விறல் முரசினோன்-
போர்க்களத்தில்  பகைவரை  வென்று   முழக்கும்   விறல்படைத்த
முரசினையுடையவன்; என் சிறுமையின் இழித்து நோக்கான் - என் சிறுமை
கண்டும் இகழ்ந்து நோக்காது; தன்  பெருமையின்  தகவு  நோக்கி - தன் 
பெருமையும் தகதியும் நோக்கி; குன்றுறழ்ந்த களிறு - மலைபோன்ற
களிறுகளும்; கொய்யுளையமா - கொய்யப் பட்ட தலையாட்டமணிந்த
குதிரைகளும்; மன்று நிறையும் நிரை - மன்றிடம் நிறைந்த  ஆனிரைகளும்;
மனனக்களமரொடு  களம் - மனைக்கண்  இருந்து பணிபுரியும் களமரும்
நெற்போர்க்களங்களுமாகிய; அவை - அவற்றை; வல்லே - விரைவாக;
கனவென மருள நனவின் நல்கியோன் - கனவென்று மயங்குமாறு நனவின்கண்
நல்கினான்;  நசைசால்  தோன்றல் - அன்பு நிறைந்த தலைவன்; பூழியர்
பெருமகன் பூழிநாட்டார்க்குப்  பெருந்தலைவனாயவன்; பிணர் மருப்பு யானை
சருக்சரை - பொருந்திய  கையும் கோடுமுடைய யானைகள் செய்யும்; செருமிகு
நோன்றாள் - போரில்  மேம்பட்ட  வலிய  தாளையுடைய; செல்வக் கடுங்கோ
வாழியாதன்; என்னா - என்று; தன் பெயர் கூறிய அளவில்; தெவ்வர்
உயர்குடை  பணித்து - பகைவர்  தம்முடைய  உயர்ந்த கொற்றக் குடையைத்
தாழ்த்தி வணங்கி; நெடிது நில்லாது இவண்