| | ஆங்கப், பலநல்ல புலனணியும் சீர்சான்ற விழுச்சிறப்பிற் சிறுகண் யானைப் பெறலருந் தித்தன செல்லா நல்லிசை யுறந்தைக் குணாது |
| 20. | நெடுங்கை வேண்மா னருங்கடிப் பிடவூர் |
| | அறப்பெயர்ச் சாத்தன் கிணையேம் பெருமவெண முன்னா ணன்பகற் சுரனுழந்து வருந்திக் கதிர்நனி சென்ற கனையிருண் மாலைத் தன்கடைத் தோன்றி யென்னுற விசைத்தலிற் |
| 25. | றீங்குரல...கினரிக்குரற் றடாரியோ |
| | டாங்குநின்று வெற்கண்டு சிறிது நில்லான் பெரிதுங் கூறான் அருங்கலம் வரவே யருளினன் வேண்டி ஐயென வுரைத்தன்றி நல்கித் தன்மனைப் |
| 30. | பொன்போன் மடந்தையைக் காட்டி யிவனை |
| | என்போற் போற்றென் றோனே யதற்கொண் டவன்மறவ லேனே பிறருள்ள லேனே அகன்ஞாலம் பெரிது வெம்பினும் மிகவானு ளெரிதோன்றினும் |
| 35. | குளமீனொடுந் தாட்புகையினும் |
| | பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர் நிமிரல் பசுங்கட் கருனைச் சூட்டொடு மாந்தி விளை வொன்றொ வெள்ளங்கொள்கென உள்ளது மில்லது மறியா |
| 40. | தாங்கமைந் தன்றால் வாழ்கவன் றாளே. |