5 | வேந்துபீ டழித்த வேந்துவேற் றானையொ | | டாற்ற லென்பதன் றோற்றங் கேளினிக் கள்ளி போகிய களரியம் பறந்தலை முள்ளுடை விளன்காட் டதுவே நன்றும் சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்லென | 10 | இன்னிசைப் பறையொடு வென்றி நுவலத் | | தூக்கணங் குரீஇத் தூங்குகூ டேய்ப்ப ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி ஞாலங் காவலர் கடைத்தலைக் காலைத் தோன்றினு நோகோ யானே. |
திணையும் துறையு மவை. சோழன் நலங்கிள்ளியை ஆலத்தூர் கிழார் பாடியது.
உரை:தலையோர் - முன்செல்லும் தூசிப்படையோர்;நுங்கின் தீஞ் - சேறு மிசைய - பனையின்கண் உளதாகிய நுங்கினது இனிய செறிவை அயில; இடையோர் - இடைச் செல்வோர்; பழத்தின் பைங்கனி மாந்த - பழத்தினது செவ்விக்கனியை நுகர; கடையோர் - பின் செல்வோர்; விடுவாய் பிசிரொடு சுடு கிழங்கு நுகர - நீங்கிய வாயையுடைய பிசிருடனே சுடப்பட்ட கிழங்கினை நுகர; நிலம் மலர் வையத்து வலமுறை வளைஇ - இப்படி யொழுங்குடைத்தாகி இடமகன்ற உலகத்து வலமுறையாச் சூழ்ந்து; வேந்து பீடழித்த ஏந்து வேல் தானையோடு - மன்னரை வலிகெடுத்த மேம்பட்ட வேலையுடைய சேனையுடனே கூடிய; ஆற்றல் என்பதன் தோற்றம் - வலியென்று சொல்லப்பட்டதன் விளைவை; இனி கேள் - இனிக் கேட்பாயாக; கள்ளி போகிய களரியம் பறந்தலை - கள்ளி யோங்கிய களர் நிலமாகிய பாழ்பட்ட விடத்து; முள்ளுடை வியன் காட்டது - முள்ளுடைத்தாகிய பெரிய புறங்காட்டின் கண்ணதாயிற்று; நன்று பெரிதும்; சேட்சென்னி நலங்கிள்ளி -; கேட்குவன் கொல்லென - கேட்பான் கொல்லோ என அஞ்சி; இன்னிசைப் பறையொடு வென்றி நுவல - இனிய ஓசையையுடைய முரசுடனே வெற்றியைச் சொல்லாநிற்க; தூக்கணங் குரீஇ தூங்குகூடு ஏய்ப்ப - முன்பு தூக்கணங் குருவியினது தூங்கப்பட்ட; வலம்புரி திரிவாய் - வலத்திலேபுரிந்த திரிந்த வாயையுடைய சங்கம்; ஞாலங் காவலர் கடைத்தலை - இப்பொழுது உலகங்காக்கும் அரசரது வாயிலிடத்தே; காலைத் தோன்றினும்- பள்ளியெழுச்சிக்காலத்தே தோன்றினும்; யான் நோகு - யான் அதனைக்கேட்டு இறந்து படாது நோமளவினே னாயினேன்; எ - று. |