பக்கம் எண் :

57

     
5வேந்துபீ டழித்த வேந்துவேற் றானையொ
 டாற்ற லென்பதன் றோற்றங் கேளினிக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
முள்ளுடை விளன்காட் டதுவே நன்றும்
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்லென
10இன்னிசைப் பறையொடு வென்றி நுவலத்
 தூக்கணங் குரீஇத் தூங்குகூ டேய்ப்ப
ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி
ஞாலங் காவலர் கடைத்தலைக்
காலைத் தோன்றினு நோகோ யானே.

   திணையும் துறையு மவை. சோழன் நலங்கிள்ளியை ஆலத்தூர்
கிழார் பாடியது.

     உரை:தலையோர் - முன்செல்லும் தூசிப்படையோர்;நுங்கின் தீஞ் -
சேறு மிசைய - பனையின்கண் உளதாகிய நுங்கினது இனிய செறிவை
அயில; இடையோர் - இடைச் செல்வோர்; பழத்தின் பைங்கனி மாந்த -
பழத்தினது செவ்விக்கனியை நுகர; கடையோர் - பின் செல்வோர்; விடுவாய்
பிசிரொடு சுடு கிழங்கு நுகர - நீங்கிய வாயையுடைய பிசிருடனே சுடப்பட்ட
கிழங்கினை நுகர; நிலம் மலர் வையத்து வலமுறை வளைஇ - இப்படி
யொழுங்குடைத்தாகி இடமகன்ற உலகத்து வலமுறையாச் சூழ்ந்து; வேந்து
பீடழித்த ஏந்து வேல் தானையோடு - மன்னரை வலிகெடுத்த மேம்பட்ட
வேலையுடைய சேனையுடனே கூடிய; ஆற்றல் என்பதன் தோற்றம் -
வலியென்று சொல்லப்பட்டதன் விளைவை; இனி கேள் - இனிக்
கேட்பாயாக; கள்ளி போகிய களரியம் பறந்தலை - கள்ளி யோங்கிய களர்
நிலமாகிய பாழ்பட்ட விடத்து; முள்ளுடை வியன் காட்டது -
முள்ளுடைத்தாகிய பெரிய புறங்காட்டின் கண்ணதாயிற்று; நன்று பெரிதும்;
சேட்சென்னி நலங்கிள்ளி -; கேட்குவன் கொல்லென - கேட்பான்
கொல்லோ என அஞ்சி; இன்னிசைப் பறையொடு வென்றி நுவல - இனிய
ஓசையையுடைய முரசுடனே வெற்றியைச் சொல்லாநிற்க; தூக்கணங் குரீஇ
தூங்குகூடு ஏய்ப்ப - முன்பு தூக்கணங் குருவியினது தூங்கப்பட்ட; வலம்புரி
திரிவாய் - வலத்திலேபுரிந்த திரிந்த வாயையுடைய சங்கம்; ஞாலங் காவலர்
கடைத்தலை - இப்பொழுது உலகங்காக்கும் அரசரது வாயிலிடத்தே;
காலைத் தோன்றினும்- பள்ளியெழுச்சிக்காலத்தே தோன்றினும்; யான் நோகு
- யான் அதனைக்கேட்டு இறந்து படாது நோமளவினே னாயினேன்;
எ - று.