| 20 | இரும்புலி வரிப்புறங் கடுக்கும் | | பெருங்கல் வைப்பி னாடுகிழ வோயே. |
திணையுந்துறையுமறை.இருங்கோவேள்பாரிமகளிரைக் கொள்ளானாகக் கபிலர் பாடியது.
உரை: வெட்சிக்கானத்து வேட்டுவர் ஆட்ட - வெட்சியையுடைய காட்டின் நடுவண் வேட்டுவர் அலைப்ப; கட்சிகாணாக் கடமா நல்லேறு - தனக்குப் புகலிடங் காணாத கடமாவினது நல்ல ஏறு; கடறு மணிகிளர - வரைச்சாரல் மணி மேலே கிளம்பவும்; சிதறு பொன்மிளிர - சிதறிய பொன் விளங்கவும்; கடிய கதழும் நெடுவரைப்படப்பை - விரையவோடும்மலைப்பக்கத்து; வென்றி நிலைஇய விழுப்புகழ் ஒன்றி - வெற்றி நிலைபெற்றசிறந்த புகழ் பொருத்தி; இருபால் பெயரிய உருகெழு மூதூர் - சிற்றரையம் பேரரையமென இருகூற்றாற் பெயர்பெற்ற உட்குப்பொருந்திய பழைய வூரின்கண்; கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய - பல கோடியாக அடுக்கப்பட்ட பொன்னை நுங்களுக்கு உதவிய; நீடுநிலை அரையத்துக் கேடும் - நீடிய நிலையையுடைய அரையத்தினது கேட்டையும்; இனி கேள் - இனிக் கேட்பாயாக, அது கெடுதற்குக் காரணம்; நுந்தை தாயம் நிறைவுற எய்திய - நினது தாளால் தரப்பட்ட பொருளையன்றி நுந்தையுடைய உரிமையை நிறையப்பெற்ற; ஒலியல் கண்ணி புலிகடி மாஅல் - தழைத்த கண்ணியையுடைய புலிகடிமாலே; நும்போல் அறிவின் நுமருள் ஒருவன் - நும்மை யொக்கும் அறிவினையுடைய நுங்குடியுள் ஒருவன்; புகழ்ந்த செய்யுள் கழா அத் தலையை இகழ்ந்ததன் பயன் - புகழ்ந்த செய்யுளையுடைய கழா அத் தலையா ரென்னும் புலவரை அவமதித்ததனாலுண்டான பயன்; இயல்தேர் அண்ணல் - இயற்றப்பட்ட தேரையுடைய தலைவ; இவர் எவ்விதொல்குடிப் படீஇயர் - இவர் எவ்வியுடைய பழைய குடியிலே படுவார்களாக; மற்று இவர் கைவண் பாரிமகளிர் என்ற - பின்னை இவர் கைவண்மையையுடைய பாரிமகளிரென்று சொல்லிய; என்தேற்றாப் புன்சொல் நோற்றிசின் - எனது தெளியாத புன்சொல்லைப் பொறுப்பாயாக; பெரும - பெருமானே; விடுத்தனென் - யான் நின்னை விடை கொண்டேன்; நின்வேல் வெலீஇயர் - நின்வேல் வெல்வதாக; அடுக்கத்து அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை - அரைமலையில் முகையற மலர்ந்த கரிய காலையுடைய வேங்கையினது; மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல் - கரிய புறவிதழையுடைய ஒள்ளிய பூப்பரந்த பொற்றைக்கல்; இரும்புலி வரிப்புறம் கடுக்கும் - பெரும்பிலியினது வரியையுடைய புறத்தை யெக்கும்; பெருங்கல் வைப்பின் நாடுகிழவோய் - பெரிய மலையிடத் தூர்களையுடைய நாட்டையுடையோய் எ - று. |