பக்கம் எண் :

61

     
5 கருதியங் கரூஉப்புனற் பொருகளத் தொழிய
 நாளு மானான் கடந்தட் டென்றுநின்
வாடுபசி யருத்திய பழிதீ ராற்றல்
நின்னோ ரன்ன பொன்னியற் பெரும்பூண்
வளவ னென்னும் வண்டுமூசு கண்ணி
10இனையோற் கொண்டனை யாயின்
 இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே.

   திணையும் துறைவு மவை. அவனை ஆவடுதுரை மாசாத்தனார்
பாடியது.

    உரை: நயனில் கூற்றம் - ஈரமில்லாத கூற்றமே; நனிபேதை - மிகவும்
அறிவுடையையல்லை; விரகு இன்மையின் - நினக்குப் போவதொரு
விரகில்லாதமையினால்; வித்து அட்டு உண்டனை - மேல்விளைந்து
பயன்படும் விதையைக் குற்றியுண்டாய்;நன்வாயாகுதல் இன்னும் காண்குவை
- ஆயின் நினக்கு இவ்வாறு சொல்லிய வார்த்தை நல்ல மெய்யாதல்
இன்னமும் காண்பை; ஒளிறுவாள் மறவரும் களிறும் மாவும் - ஒளிவிளங்கிய
வாட்போரை வல்ல வீரரும் யானையும் குதிரையும்; குருதியங் குரூஉப் புனல்
பொருகளத் தொழிய - உதிரமாகிய நிறமுடைய அழகிய நீர் மிக்க
போர்க்களத்தின்கண் மாய; நாளும் ஆனான் கடந்து அட்டு - நாடோறும்
அமையானாய் எதிர்நின்று கொன்று; என்றும் நின் வாடுபசி அருத்திய
பழிதீர் ஆற்றல் - நாடோறும் நினது மெய் வாடுதற் கேதுவாகிய பசி
தீர்தற்கு ஊட்டிய வசையற்ற வலியையுடைய கொலைத் தொழிலுக்கு;
நின்னே ரன்ன - நின்னையொத்த; பொன் இயல் பெரும்பூண்
வளவனென்னும் - பொன்னானியன்ற பேரணிகலத்தையுடைய வளவனென்று
சொல்லப்படும்; வண்டு மூசு கண்ணி இனையோன் கொண்டனை யாயின் -
வண்டுகள் மொய்க்கப்படுங் கண்ணியையுடைய இத் தன்மையினை
யுடையோனை நீ கொண்டாயாயின்; இனி நின்பசி தீர்ப்போர் யார் - இனி
நின் பசியைக் கெடுப்போர் யார், சொல்லுவாயாக; எ - று.


    கூற்றமே, இத்தன்மையோனைக் கொண்டாயாயின், நின் பசியைத்
தீர்ப்போர் இனி யார்? விரகின்மையின் வித்தட்டுண்டனை; நன்வாயாகுதல்
இன்னும் காண்குவை எனக் கூட்டி வினைமுடிவு செய்க நயன் -
நியாயமுமாம்.

    விளக்கம்: “நனிபேதையே” என்ற துணிவை வற்புறுத்தற்கு
“வித்தட்டுண்டனை” என்றார். வேறே செய்தற்குரியவற்றை யெண்ணும்
அறிவில்லையாயினை யென்பால், “விரகின்மையின்” என்று காட்டினார்.
வித்து, மேல்விளைந்து பயன் படுவதாகலின், “மேல் விளைந்து பயன்படும்
விதை” யெனவே உரை கூறப்பட்டது. வித்தென்றமையின், அட்டுண்டனை