பக்கம் எண் :

69

     
 நீயிழந் தனையே யறனில் கூற்றம்
வாழ்தலின் வரூஉம் வயல்வள னறியான்
வீழ்குடி யுழவன் வித்துண் டாஅங்
கொருவ னாருயி ருண்ணா யாயின்
15நேரார் பல்லுயிர் பருகி
 ஆர்குவை மன்னோவவ னமரடு களத்தே.

   திணை: அது துறை: கையறுநிலை. அதியமான் தகடூர்ப் பொருது
வீழ்ந்த எழினியை அரிசில்கிழார் பாடியது.

     உரை: கன்றமராயம் கானத்து அல்கவும் - கன்றை மேவிய ஆனிரை
மேய்ந்த காட்டிடத்தே பிறிதொன்றால் ஏதமின்றிக் கிடப்பவும்; வெங்கால்
வம்பலர் வேண்டு புலத்து உறையவும் - சுரத்தில் நடத்தலால் வெம்மையுற்ற
காலினையுடைய வழிபோவார் தாம் வேண்டியவிடத்தே தங்கவும்; களமலி
குப்பைகாப்பில வைகவும் -களத்தின்கண்நிறைந்த  நெற்பொலி
காவலின்றியே கிடப்பவும்; விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல் -
எதிரில் நின்று தடுக்கும் பகையைத் துரந்த நிலங்கலங்காதசெவ்விய
ஆட்சியினையும்; வையகம் புகழ்ந்த வயங்கு வினை - உலகத்தார் புகழ்ந்த
விளங்கிய போரைச் செய்யும்; ஒள்வாள் பொய்யா எழினி பொருது களம்
சேர - ஒள்ளிய வாளினையும் தப்பாதமொழியினையுமுடையஎழினி
பொருது போர்க்களத்தின் கண்ணே வீழ; ஈன்றோள் நீத்த குழவி போல -
பெற்ற தாயாற் கைவிடப்பட்ட உண்ணாத குழவியை யொப்ப; தன் அமர்
சுற்றம் தலைத்தலை இனைய - தன்னைமேவியகிளைஇடந்தோறும்
இடந்தோறும் வருந்த; கடும்பசி கலக்கிய இடும்பை  கூர்  நெஞ்சமோடு -
மிக்க பசி வருத்திய கலக்கமுற்று துன்ப மிக்க நெஞ்சமோடு;நோய் உழந்து
வைகிய உலகினும்-அவனை யிழந்துவருத்தமுற்றுக்கிடந்த  உலகத்து
விதனத்தினும்; மிக நனி நீ இழந்தனை - மிகப் பெரிதாக நீ இழந்தாய்;
அறன் இல் கூற்றம் - அறமில்லாதகூற்றமே;வாழ்தலின்  வரூஉம் -
வாழ்தல் ஏதுவாக வரும்; வயல் வளன் அறியான் - வயலிடத்து விளையும்
வருவாயை யறியானாய்; வீழ்குடி யுழவன் - தளர்ந்த குடியையுடைய
உழவன்; வித்து உண்டாங்கு - விதையை யுண்டாற் போல; ஒருவன்
ஆருயிர் உண்ணாயாயின் - இந்த ஒருவனது  பெறுதற்கரிய
உயிரையுண்டிலை யாயின்; நேரார்   பல்லுயிர்   பருகிஆர்குவை -
பகைவருடைய பல உயிரையும் பருகி நிறைவை; அவன் அமர் அடுகளத்து
- அவன் போரில் பகைவரைக் கொல்லும் களத்தின்கண்; எ - று.


    மன்: கழிவின்கண் வந்தது. உயிர் உண்ணவும் பருகவும் படுவதன்.
றாயினும் அவ்வாறு கூறுதல், “அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப், பகல்