| | செற்றோரை வழிதபுத்தனன் | 5 | நட்டோரை யுயர்புகூறினன் | | வலியரென வழிமொழியலன் மெலியரென மீக்கூறலன் பிறரைத்தா னிரப்பறியலன் இரந்தோர்க்கு மறுப்பறியலன் | 10 | வேந்துடை யவையத் தோங்குபுகழ் தோற்றினன் | | வருபடை யெதிர் தாங்கினன் பெயர்படை புறங்கண்டனன் கடும்பரிய மாக்கடவினன் நெடுங்தெருவிற் றேர்வழங்கினன் | 15 | ஓங்கியல களிறூர்ந்தனன் | | தீஞ்செறி தசும்புதொலைச்சினன். பாணுவப்பப் பசிதீர்த்தனன் மயக்குடைய மொழிவிடுத்தனன், ஆங்குச் செய்ப வெல்லாஞ் செய்தன னாகலின் | 20 | இடுக வொன்றோ சுடுக வொன்றோ | | படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் றலையே. |
திணையும் துறையு மவை. நம்பிநெடுஞ்செழியனைப் பேரெயில் முறுவலார் பாடியது.
உரை: தொடியுடைய தோள் மணந்தனன் - இளைய மகளிரது வளையணிந்த தோளை முயங்கினான்; கடிகாவில் பூச்சூடினன் - காவலையுடைய இளமரக்காக்களில் பூவைச் சூடினான்; தண் கமழும் சாந்து நீவினன் - குளிர்ந்த மணம் நாறும் சாந்தைப் பூசினான்; செற்றோரை வழி தபுத்தனன் - பகைத்தோரைக் கிளையொடுங் கெடுத்தான்; நட்டோரை உயர்பு கூறினன் - நட்டோரை மிகுத்துக் கூறினான்; வலியரெனவழி மொழியலன் - இவர் நம்மில் வலியரென்று கருதி அவர்க்கு வழிபாடு கூறியறியான்; மெலியரென மீக் கூறலன் - இவர் நம்மில் எளியரென்று கருதி அவரின் மிகுத்துச் சொல்லியறியான்; பிறரைத் தான் இரப்பறியலன்- பிறரைத் தான் ஒன்று ஈயெனச் சொல்லி இரந்தறியான்; இரந்தோரக்கு மறுப்பறியலன் - சூழ்ந்துநின்று இரந்தோர்க்கு யாதும் இல்லையென்று மறுத்தலை யறியான்; வேந்துடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன் - அரசருடைய அவைக்களத்தின்கண் தனது உயர்ந்த புகழை வெளிப் படுத்தினான்; வருபடை எதிர் தாங்கினன் - தன்மேல் வரும்படையைத் தன்னெல்லையுட் புகுதாமல் எதிர்நின்று தடுத்தான்; பெயர் படை புறங்கண்டனன் - புறக்கொடுத்துப் பெயரப்பட்ட படையினது புறக்கொடை |