பக்கம் எண் :

89

     
 ஆடுநடைப் புரவியுங் களிறுந் தேரும்
வாடா யாணர் நாடு மூரும்
பாடுநர்க் கருகா வாஅ யண்டிரன்
கோடேந் தல்குற் குறுந்தொடி மகளிரொடு
5கால னென்னுங் கண்ணிலி யுய்ப்ப
 மேலோ ருலக மெய்தின னெனாஅப்
பொத்த வறையுட் போழ்வாய்க் கூகை
சுட்டுக் குவியெனச் செத்தோர்ப் பயிரும்
கள்ளியம் பறந்தலை யொருசிறை யல்கி
10ஒள்ளெரி நைப்ப வுடம்பு மாய்ந்தது
 புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது
கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்
வாடிய பசிய ராகிப்பிறர்
நாடுபடு செலவின ராயின ரினியே.

   திணையும் துறை மவை. ஆயைக் குட்டுவன் கீரனார் பாடியது.

    உரை: ஆடுநடைப் புரவியும் - தாளத்திற்கேற்ப நடக்கும் அசைந்த
நடையையுடைய குதிரைகளும்; களிறும் தேரும் - யானைகளும் தேர்களும்;
வாடாயாணர் நாடும் ஊரும் - அழியாத புதுவருவாயையுடைய நாடும்
ஊர்களும்; பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் - பாடுவார்க்குக்
குறைவறக் கொடுக்கும் ஆயாகிய அண்டிரன்; கோடு ஏந்து அல்குல்
குறுந்தொடி மகளிரொடு - கோடேந்திய அல்குலினையும் குறிய
வளைகளையுமுடைய உரிமை மகளிரோடு; காலன் என்னும் கண்ணிலி
உய்ப்ப - காலனென்று சொல்லப்படாநின்ற கண்ணோட்ட மில்லாதவன்
கொண்டுபோக; மேலோர் உலகம் எய்தினன் எனாஅ தேவருலகத்தை
யடைந்தானாகக் கொண்டு; பொத்த அறையுள் - பொந்தாகிய தான்
வாழுமிடத்து;போழ்வாய்க் கூகை - போழ்ந்தாற் போலும் வாயலகையுடைய
பேராந்தை; சுட்டுக்குவி எனச் செத்தோர்ப் பயிரும் - சுட்டுக் குவியென்று
செத்தோரை அழைப்பதுபோலக் கூவும்; கள்ளியம் பறந்தலை -
கள்ளியையுடைய பாழிடமாகிய புறங்காட்டுள்; ஒரு சிறை அல்கி - ஒரு
புடையிலே தங்கி; ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது - ஒள்ளிய தீச்சுட
உடம்பு மாய்ந்துவிட்டது; புல்லென் கண்ணர் - பொலிவழிந்த
கண்ணினையுடையராய்; புரவலர்க் காணாது - தம்மைப் பாதுகாப்போரைக்
காணாது; கல்லென்சுற்றமொடு கையழிந்து - ஆரவாரிக்கும் கிளையுடனே
செயலற்று; புலவர் - அறிவுடையோர்; வாடிய பசியராகி - தம்
மெய்யுணங்கிய
  பசியையுடையராய்;