பக்கம் எண் :

94

     
 இனிநினைந் திரக்க மாகின்று திணிமணற்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கய மாடு மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
5மறையென லறியா மாயமி லாயமொ
 டுயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோ டேறிச் சீர்மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
10குளித்துமணற் கொண்ட கல்லா விளமை
 அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோர்
தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற்
றிருமிடை மிடைந்த சிலசொற்
பெருமூதாளரே மாகிய வெமக்கே.

   திணையும் துறையு மவை. அவனைத் தொடித்தலை
விழுத்தண்டினர் பாடியது .

     உரை: இனி நினைந்து இரக்கமாகின்றது - இப்பொழுது நினைந்து
இரக்கமாகாநின்றது ; திணி மணல் செய்வுறு பாவைக்கு செறிந்த -
மணலிடத்துச் செய்யப்பட்ட வண்டற் பாவைக்கு; கொய்பூத தைஇ -
பறிக்கப்பட்ட பூவைப் பறித்துச் சூடி; தண் கயம் ஆடும் மகளிரொடு கை
பிணைந்து - குளிர்ந்த பொய்கையின்கண் விளையாடும் மகளிரோடு
கைகோத்து; தழுவு வழித் தழீஇ - அவர் தழுவினவிடத்தே தழுவி; தூங்கு
வழித் தூங்கி - அசைந்தவிடத்தே அசைந்து ; மறை எனல் அறியா மாயமில்
ஆயமொடு - ஒளித்துச் செய்யும் அஃதறியாத வஞ்சனையில்லாத
இளமைந்தருடனே கூட; உயர்சினை மருதம் - உயர்ந்த கோடுகளுடைய
மருதினது; துறையுறத் தாழ்ந்து - துறையிலே வந்து உறத்தாழ்ந்து; நீர்
நணிப் படி கோடு ஏறி - நீர்க்கு அண்ணிதாகப் படிந்த கொம்பிலே
யேறி ; சீர் மிக - அழகு மிக; கரையவர் மருள - கரையிடத்து நிற்போர்
வியப்ப; திரையகம் பிதிர - திரையிடத்துத் திவலையெழ; நெடு நீர்க்
குட்ட த்துத் துடும் எனப்பாய்ந்து குளித்து - ஆழத்தான் நெடிய
நீரையுடைய மடுவின்கண் துடுமென்றொலிப்பக் குறித்து மூழ்கி; மணல்
கொண்ட கல்லா இளமை - மணலை முகந்து காட்டிய கல்வியில்லாத
இளமை; அளிது - இரங்கத்தக்கது; யாண்டு உண்டு கொல்லோ -
அவ்விளமை எவ்விடத் துண்டு கொல்லோ; தொடித்தலை விழுத்தண்டு
ஊன்றி - பூண் செறிந்த