| | அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட | 5 | காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா | | தடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட வேளை வெந்தை வல்சி யாகப் பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் | 10 | உயவற் பெண்டிரே மல்லே மாதோ | | பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீமம் நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம் பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற வள்ளித ழவிழ்ந்த தாமரை | 15 | நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே. |
திணை: அது. துறை: ஆனந்தப்பையுள். பூதபாண்டியன் தேவி பெருங். கோப்பெண்டு தீப்பாய்வாள் சொல்லியது.
ஆனந்தப் பையுளாவது: விழுமங்கூர வேய்த்தோ ளரிவை, கொழு நன் வீயக் குழைந்துயங் கின்று (பு.வெ.மா.சிறப். பொது. 13)
உரை: பல் சான்றீரே பல் சான்றீரே - பல சான்றவிரே பல சான்றவிரே; செல்க எனச் சொல்லாது - நின் தலைவனோடு இறப்ப நீ போ என்று கூறாது; ஒழிக என விலக்கும் - அதனைத் தவிர்க என்று சொல்லி விலக்கும்; பொல்லாச் சூழ்ச்சி பல்சான்றீரே - பொல்லாத விசாரத்தையுடைய பல சான்றவிரே; அணில் வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட காழ்போல் - அணிலினது வரிபோலும் வரியையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்திடப்பட்ட விதைபோன்ற; நல் விளர் நறுநெய் தீண்டாது- நல்ல வெள்ளிய நறியநெய் தீண்டாமல்; அடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம் - இலையிடையே பயின்ற கையாற் பிழிந்து கொள்ளப்பட்ட நீர்ச் சோற்றுத் திரளுடனே; வெள்ளெள் சாந்தோடு - வெள்ளிய எள்ளரைத்த விழுதுடனே; புளி பெய்து அட்ட வேளை வெந்தை - புளி கூட்டி யடப்பட்ட வேளையிலை வெந்த வேவையுமாகிய இவை; வல்சியாக - உணவாகக் கொண்டு; பரல் பெய் பள்ளி - பருக்கைகளாற் படுக்கப் பட்ட படுக்கையின்கண்; பாய் இன்று வதியும் - பாயுமின்றிக் கிடக்கும்; உயவல் பெண்டிரேம் அல்லேம் - கைம்மை நோன்பால் வருந்தும் பெண்டிருள்ளே மல்லேம் யாம்; பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம் - புறங்காட்டின்கண் உண்டாக்கப் பட்ட கரிய முருட்டால் அடுக்கப்பட்ட பிணப்படுக்கை; நுமக்கு அரிதாகுக - உங்களுக்கு அரிதாவதாகுக; எமக்கு எம் பெருந்தோள் கணவன் மாய்ந்தென- எமக்கு எம்முடைய பெரிய |