கயவர் தேவர் அனையர் - கயவர் தேவரை யொத்தவர்; அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான் - அவரும் தேவரைப்போல முழுவுரிமையுடையவராய்த் தாம் விரும்பியவற்றை யெல்லாம் செய்து முடித்தலால். தேவர்க்குங் கயவர்க்குமுள்ள ஒப்புமை வினையியல்பு பற்றாது அதன் முடிப்புப் பற்றியதாம். இதுவும் வஞ்சகப்புகழ்ச்சி.உம்மை எச்சம்.
|