அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின்-தலைநாளில் எதிர்ப்பட்டபோதே பேரன்பு செய்து, நின்னிற் பிரியேன், அஞ்சேல் என்று தேற்றியவர் தாமே பின் மாறாப் பிரிவராயின்; தெளித்த சொல் தேறியார்க்குத் தவறு உண்டோ-அவரிடத்தன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய்யென்று நம்பியவரிடத்துக் குற்ற முண்டோ? சொன்னதை நிறைவேற்றாமைக் குற்றம் அவரிடத்துத் தங்காவறு செலவழுங்குவி என்பது கருத்து. 'தேறியார், என்பது தன்னைப் பிறர் போற் கூறிய தன்மைப் படர்க்கை. ஒகாரவினா எதிர்மறைக் குறிப்பினது.
|