யான் நிறையுடையேன் என்பேன்- இதற்கு முன்பெல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியிருந்தேன்; என் காமம் மறை இறந்து மன்றுபடும்- ஆனால், இன்று என் காமம் கட்டிற்கடங்காது அம்பலப்பட்டுவிட்டது. இனி என் வயத்ததன்று என்பதாம். 'மன்' ஒழியிசைக் கண் வந்தது. ஓகாரம் இரக்கக் குறிப்பு. மன்று படுதல் பலருமறிதல்.
|