(இதுவுமது) உள்ளினேன் என்றேன் - பிரிந்து போயிருந்த காலத்தில் உன்னை ஒருபோதும் மறவாது நினைத்திருந்தேன் என்னுங் கருத்தில், உள்ளினேன் என்றேன், மற்று என் மறந்தீர் என்று என்னைப் புல்லாள் புலத்தக்கனள் - உடனே அதை ஒருகால் மறந்திருந்து பின்பு நினைத்துக்கொண்டேன் என்று நான் கூறியதாகக் கருதி, என்னையிடையேமறந்துவிட்டீரென்று சொல்லி, அதற்கு முன்பு என்னைத் தழுவுதற்கிருந்தவள் அதைச் செய்யாது அன்றே புலவியை மேற்கொண்டுவிட்டாள். எதிர்நிலை யளவை வகையால் உள்ளுதலுக்கு மறுதலையான மறத்தலையும் உட்கொண்டு புலந்தாள் என்பதாம். ' மற்று ' வினைமாற்றின்கண் வந்தது.
|