(இதுவுமது) தும்முச் செறுப்ப - எனக்குத் தும்மல் தோன்றியபோது, என்காதலி யாருள்ளித் தும்மினீரென்று புலத்தலஞ்சி, அதனையடக்க, நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று அழுதாள் - நும் காதலியார் நும்மை நினைத்தலை எனக்கு மறைக்கின்றீரோ என்று சொல்லி யழுதாள். தும்மினுங் குற்றம், தும்மலை யடக்கினுங் குற்றமாயின் என் செய்வது என்பதாம். ' தும்மு ' முதனிலைத் தொழிற்பெயர். பரத்தையரை 'நுமர் ' என்றதினால், 'எம்மை ' யென்பது நும்மோடியைபில்லாத எம்மை யென்பதுபட நின்றது.
|