செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்- தான் ஒரு தீங்கும் செய்யாதிருக்கவும் தன்மேற் பகைமைகொண்டு தீங்கு செய்தவர்க்கும் துறவுபூண்டவன் தீயவற்றைச் செய்வானாயின்; உய்யா விழுமம் தரும்- அச்செயல் அவனுக்குத் தப்ப முடியாத துன்பத்தைத்தரும். துன்பமாவது தவமிழத்தலும் கரிசு(பாவம்) அடைதலும். துறவறத்தில் தீமைக்குத் தீமை செய்தலும் தீவினையாம்.
|