செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்-ஒருவனுக்குச் சிறந்த செல்வமானது கேள்வியறிவாகிய செல்வம்; அச் செல்வம் செல்வத்துள் எல்லாம்தலை-அச்செல்வம் எல்லாச் செல்வங்களுள்ளும் தலைமையான தாகலான். செல்வங்கள் இருவகையும் மூவகையும் எண்வகையுமாகச் சொல்லப்படுவன. கல்வியுங் கேள்வியொடு தொடர்புடையதாய் அதனுளடங்குதலின், 'செல்வத்து ளெல்லாந்தலை' என்றார். 'கேடில் விழுச்செல்வம்' கல்வியென்பதும், 'மாடல்ல மற்றையவை' என்பதும் முன்னரே கூறப்பட்டன.
|