பொருட்பால் அரசியல் அதிகாரம் 44. குற்றங்கடிதல்அஃதாவது, ஐம்பெருங் குற்றமென்றும் அறுவகை உட்பகையென்றும் சொல்லப்படும் குற்றங்களையெல்லாம், அரசனும் பிறரும் தங்கண், நிகழாதவாறு விலக்குதல். கொலை,களவு, பொய், வெகுளி. கடும்பற்றுள்ளம், மானம், உவகை, செருக்கு என்பன அறுவகையுட்பகை. வடநூலார் இவற்றைச் சிறிது வேறுபடவுங் கூறுவர். ஆயின், அவ்விருவேறு பாகுபாட்டிற்கும் மூலம் தமிழ் என்பது தேற்றம். எனினும், அரசியற்பாகுபாடு தன் துறைக்கேற்ப மதவியற் பாகுபாட்டினின்றும், சிறிது வேறுபடும். அறிவுடையார்க் கல்லது இக்குற்றங்களைக் கடிதல் கூடாமையின், இது அறிவுடைமையின் பின் வைக்கப்பட்டது. |