எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின் - அரசர் பகையிடத்திற் செய்யும் வினைத்திறங்களை யெல்லாம் குறைவற எண்ணி அவற்றை இடத்தொடு பொருந்தச் செய்வாராயின் ; அஞ்சாமை அல்லால் துணை வேண்டா - வெல்வதற்குந் திடாரிக்கம் ஒன்றிருந்தாற்போதும் , வேறுதுணை வேண்டியதில்லை . மனத்திண்மையில்லாவிடத்து , இடமும் பிறவும் வாய்த்தும் பயனின்மையின் , அஞ்சாமையை இன்றியமையாத பெருந்துணையாகக் கூறினார் .
|