உறைசிறியார்-சிறிய ஆள்நிலத்தை யுடைய அமைச்சர்; உள் நடுங்கல் அஞ்சி-வலிய பகைவர் வந்து தம்மைத்தாக்கிய விடத்துத் தம் நாட்டிலுள்ள குடிகள் நடுங்குவது கண்டுஅஞ்சி; குறைபெறின்-பகைவருடன் ஏதேனுமொரு வகையில் உடன்படிக்கை செய்துகொள்ள வாய்க்குமாயின்; பெரியார்ப்பணிந்து கொள்வர்-அவ்வலிய பகைவர்க்குத் தாழ்ந்து அவர் கூறுங் கட்டுத்திட்டங்களை ஏற்றுக்கொள்வர். இது மிகுமெலியன் செயல். வேறு வழியின்மையால் பகைவருக்கு அடங்க வேண்டியதாயிற்று. 'உறை' முதனிலைத் தொழிலாகுபெயர். உறையும் இடம் உறை. அது நாடும் அரணுமாம். 'உள்' இடவாகு பெயர். கொடுங்கோல் மன்னர் நாட்டைக் கைப்பற்ற விரும்புவரா தலின், குறைபெறும் அருமை நோக்கிப் 'பெறின்' என்றார். வலியவனுக்குப் பணிந்து திறைகொடாவிடின் அரசு மட்டுமன்றி உயிரையும் இழக்கநேரு மாதலின், பெருங்கேட்டினும் சிற்றிழப்பு நன்றென்றார். ஆயினும், பகைவர்க்குப் பணிதல் தன்மானக் கேடாதலின், அதை எதிர்முக ஏவலாகக் கூறாது படர்க்கை வினையாக உலகியல் மேல் வைத்துக் கூறினார். 'உறைசிறியார்' என்றது, "உயர்திணை தொடர்ந்த பொருள்முத லாறும் அதனொடு சார்த்தின் அத்திணை முடிபின." (நன். 377) என்னும் நெறியீட்டைத் தழுவியதாம்.
|